வியாழன், 6 அக்டோபர், 2011

மரணமில்ல பெருவாழ்வு

சன்மார்க்கத்தின் முடிவு சாகாமல் இருப்பதே.

சாகதவனே சன்மார்
க்கி என்பது வள்ளல் பெருமானாரின் உபதேசம்
என்மார்க்கம் இறப்பு ஒழிக்கும் சன்மார்க்கம் தானே.

வள்ளல் பெருமான் "சுத்த தேகம்", "பிரணவ தேகம்" , "ஞான தேகம்" என்னும்

மூவகை தேக சித்தி பெற்றவர்.

தேக சித்தி பெற்றவர் உடம்பு நிலத்தில் விழாது
. அவர்கள் இறைவனோடு ஒன்றென
கலப்பர், அவர்களுக்கு இனி பிறப்பு இல்லை. இதுவே நித்திய தேகம்.

நித்திய தேகம் பெற்ற வள்ளல் பெருமானார் 

ஸ்ரீ முக ஆண்டு 
தை திங்கள் 19 ஆம் நாள்
30 - 1 - 1874 

வெள்ளி கிழமை 
இரவு 15 நாழிகைக்கு (12 மணிக்கு ) 
சித்தி வளாக திருமாளிகையின் 
தமது திருவறையில் அருட்பெரும் ஜோதி ஆனார்.

மரணம் தவிர்ந் தேன் என்றும் அறையப்பா முரசை

காற்றாலே புவியாலே சுகனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிற இயற்றும் கொடுஞ் செயல்க னாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே’

எல்லா உலகமும் என்வசம் ஆயின
எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின
எல்லா வித்தையும் என்வித்தை ஆயின
எல்லாப் போகமும் என்போகம் ஆயின
எல்லா இன்பமும் என்இன்பம் ஆயின
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர்
எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே.

1 கருத்து:

Popular Posts