வெள்ளி, 4 நவம்பர், 2011

வள்ளல் பெருமான் எப்படி மரணமில்ல பெருவாழ்வை மக்களுக்கு எடுத்து சொல்கிறார்?

வள்ளல் பெருமான் எப்படி மரணமில்ல பெருவாழ்வை மக்களுக்கு எடுத்து சொல்கிறார் என்று பாருங்கள்.

ஞான சரியை பாடலில் ஒவ்வொரு வார்த்தையும் கருணை .


வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன்(கற்பனை) பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

என்மொழி ஓர் பொய் மொழி என்னாதீர்

விரைந்து விரைந் அடைந்திடுமின் மேதினியீர்(உலகியலீர்) இங்கே
மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறு நினையாதீர்

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன் என உன்னாதீர் உலகீர்

வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக் கொண்டிடுவேன்
மனங் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்
பொய்தான் ஓர் சிறிதெனினும் புகலேன் சத்தியமே
புகல்கின்றேன் நீவிர் எலாம் புனிதமுறும் பொருட்டே

ஊனேயும் உடலழியா தூழி தொறும் ஓங்கும்
உத்தம சித்தியைப் பெறுவீர் சத்தியம் சொன்னேனே

மற்றறிவோம் எனச் சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ
சற்றும் அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts