ஞாயிறு, 6 நவம்பர், 2011

சபரிமலை


பக்தியால் ஞானத்தை காட்டுவதில் 
முன்னிற்பது இன்று சபரிமலையிலே 
கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் 
தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே!!


தூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, 
எல்லோரும் ஒரே  மாதிரி உடை, 
மலை அணிவது 
எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.

18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். 
அப்போதுதான் காணமுடியும்.

அங்கே காண்பது மகர ஜோதியை. 
எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண  
நம்மை நாம் தயார் படுத்திகொள்வதே 
சபரிமலை யாத்திரை.



குருவை பணித்து 
அவர் வழி காட்டுதலில்
இறைவனை காண 
பயண படவேண்டும். 


இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.

குரு சாமியை சந்தித்து
 மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். 

குரு வழி காட்ட மலை ஏறி 
ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்



--------பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ------

இரு முடி தாங்கி 
ஒரு மனதாகி 
குருவெனவே வந்தோம்
இரு வினை தீர்க்கும் 
அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை 
காண வந்தோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts