புதன், 30 நவம்பர், 2011

வள்ளலார் அடைந்த நிலை!!

வள்ளலார் அடைந்த நிலையை அவர் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



காற்றாலே புவியாலே ககனமத னாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே
கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்
எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே

அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து

சாகாத நல்வரம் தந்த மருந்து

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு

சித்தர்களும் முத்தர்களும் பேசுவதென் பேச்சு

அடிமுடியைக் கண்டோம்என்று சின்னம் பிடி
அருளமுதம் உண்டோம்என்று சின்னம் பிடி

வேகாதகால்உணர்ந்து சின்னம் பிடி
சாகாததலைஅறிந்து சின்னம் பிடி
சாகாத கல்விகற்றுச் சின்னம் பிடி

மீதான நிலைஏறிச் சின்னம் பிடி
வெட்டவெளி நடுநின்று சின்னம் பிடி

வேதாக மத்தின் விளைவெலாம் பெற்றேன்


பொத்திய மலப்பிணிப் புழுக் குரம்பைதான்
சித்தியல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

சித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்
இத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts