புதன், 7 டிசம்பர், 2011

ஆதிகுரு

இந்தியாவில் குருமார்களுக்கு பிரச்னை இல்லை நல்ல சீடர் பார்ப்பது
அரிது - விவேகானந்தர்.


சனகாதிகளின் தவிப்பை உணர்ந்த சர்வேஸ்வரன் அருள் புரிய திருஉளம்
கொண்டார்!சனகாதி முனிவர்கள் முன் தோன்றினார்! திடீர் என்று தன்
முன் ஒரு உருவம் தோன்றியதை கண்டு திகைத்து நின்றனர்!

பரம் பொருளை - காண விரும்பினோம் இப்படி ஒரு உருவம்
நம் முன் நிற்கிறதே ! ஏன் ? யார்? எதற்கு? என ஆச்சர்யத்துடன் தனக்குள்
வினவிகொண்டனர். கல்வி கேள்விகளில் கற்று தேர்ந்த சனகாதிகள்
ஒருவாறு யூகித்து அறிந்தனர்! நாம் கடவுளை காண விரும்பினோம்
தீடீர் என்று தோன்றிய இவ்வுருவம் ஒன்றும் கூறாமல் நம்முன் இருகிறதே!
கடவுளை காண அந்த கடவுளே நமக்கு வழி காட்டத்தான் என யூகித்து அறிந்தனர்.

கடவுளை! எல்லாம் கடந்தவனை அவ்வளவு எளிதாக காண முடியுமா என்ன?
நாம் அதற்க்கு பக்குவமாக இருக்க வேண்டாமா? சனகாதிகளுக்கே
இறைவன் நேரில் அருள் புரியவில்லை!?

சர்வமும் அறிந்த சனகாதி முனிவர்களுக்கு, அதன் மூலம் உலகுக்கே,
இறைவன் முதன்முதலாய் குருவாக வந்து காட்சி கொடுத்து மோன
உபதேசம் அருளினான்!

தன்னை அடைய குரு உபதேசம் பெறவேண்டியதன் முக்கியத்துவத்தை
தானே முதல் குருவாய் அமர்ந்து காட்டினார். ஆதி குருவனே இறைவனே
சனகாதி முனிவர்களுக்காக தட்சினாமூர்த்தியாக காட்சி கொடுத்தார்!
அதன் மூலம் மீட்சி பெற வழிகாட்டினார்.

தங்கள் முன் பேசாமல் பாதி கண் திறந்த நிலையில், இடக்காலை மடக்கி,
வலக்காலை ஊன்றி அசுரனை மிதித்த நிலையில் கல்லால் மரத்தின் கீழ்
அமர்ந்திருக்கும் பகவானை கண்டனர். ஒரு கையில் தீயும் ஒரு கையில்
உடுக்கையும் ஒரு கையில் வேதமும் ஒரு கை சின்முத்திரையுடன்
அருளும் நிலையும் இருக்க கண்டனர். நாற்கரமும் கண்டனர்.

சடா மகுட சிரசின் வலப்பக்கம் சூரியன் இடப்பக்கம் சந்திர பிறையுடன்,
சாந்தம் தவழும் அழகியமுகமும் கண்டனர்.

யோசித்தனர்! யூகித்தனர்! ஒருவாறு உண்மையை உணர்ந்து கொண்டனர் !
அது என்ன?


ஆதி குருவாகிய இறைவனே தட்சினாமூர்த்தியாக தங்கள் முன்
தோன்றியுள்ளது! தென் திசையான எமனிடமிருந்து மீள, மரணமில்ல
பெருவாழ்வு பெற தென் திசை நோக்கி இருக்கும் ஆதிகுரு
தட்சினாமூர்த்தியை வடக்கு நோக்கி அமரவேண்டும். தட்சின பாகத்தை
தென்திசை நோக்கி அமர்ந்த மூர்த்தம் ஆனதால் தட்சினாமூர்த்தி என்றனர்
சனகாதிகள்.

ஆதிகுரு ஒன்றும் பேசாமல் இருப்பதால் நாமும் ஒன்றும் பேசாமல்
மௌனமாக இருக்கவேண்டும் என்று உணர்ந்தனர். இதுவே மோன நிலை.

இறைவன், தான் தீயைய் சுமந்து தான் தீயாக அக்னியாக ஜோதி
ஸ்வருபமாக இருப்பதை உணர்த்துகிறார்! அது மட்டுமல்ல ஒளியான
அவனோடு உடுக்கை ஒலி ஓங்காரம் நாதமும் இருப்பதாகவும் உணர்த்துகிறார்!

அதாவது ஒளியும் ஒலியும்
விந்து நாதமாக இருப்பவன்.

மற்றொரு கையில் இருக்கும் வேதங்கள் சொல்வது இதைத்தான்!
தட்சினாமூர்த்தியான இறைவனை பற்றியும், அவனை அடைய வழியுமே!
நான்காவது கை அருள்பொழியும் சின்முத்திரை தாங்கிய கை!

ஒளிசேர்ந்த ஒலியாய் பரம்பொருள் சின்முத்திரையில் உள்ளார்.
சின்முத்திரை உணர்ந்து தவம் செய்க!

கண் திறந்து பேசாது "சும்மா இரு" என்பதுவே ஆதிகுரு
தட்சினாமூர்த்தி சொல்லாமல் உணர்த்திய ஞான ரகசியம்.

இறைவன் நேரடியாக அருளவில்லை. குருவாக உபதேசித்து அருளினார்.
தன்னை அடைய குரு மிக மிக மிக அவசியம் என்பதை உணர்த்தி "சும்மா
இரு " என்பதை உபதேசிக்கிறார். சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்து
பக்குவம் பெற்றவர்க்கே இறைவன் தன்னை காட்டியும் உணர்த்தியும்
அரவணைத்தும் ஆட்கொள்கிறார். இதுவே ஞான நிலை! மோன நிலை!

திருப்புகழில் அருணகிரிநாதர் "சும்மா இரு சொல்லற" என
முருக பெருமான் தனக்கு குருவாய் வந்து அருளிய திறத்தை
வியந்து கூறுகிறார்.

ஆதிகுரு தட்சினாமூர்த்தியே! அது சாட்சாத் இறைவனே !
சும்மா இரு! விழித்திரு! இதுவே அவர் உபதேசம் இதுவே ஞானம்!

சாகாக்கல்வி புத்தகத்தை முழுமையாக படியுங்கள் பயன்பெறுங்கள்!



----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

4 கருத்துகள்:

  1. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
    வணக்கம். தங்களது பதிவு ,கல் மனதையும் கரையவைக்கும் .மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. எப்படி அய்யா சும்மா இருக்க முடியும்????நம் வாழ்க்கைக்கு தேவையானவற்றை நாம் தானே கஷ்ட பட்டு சம்பாதிக்க வேண்டும்????இதற்கிடையில் எப்படி சும்மா இருந்து தவம் செய்வது????ரொம்போ கஷ்டம் சார்!!!!

    பதிலளிநீக்கு
  3. சும்மா இருப்பது உடலால் அல்ல.. மனதை திருவடியில் வைத்து, உங்கள் உலக வேலை செய்யும் போது
    இன்னும் சிறப்பாக செயல் படும். குழப்ப மான மனதை வைத்து வேலை செய்வதை விட சும்மா இருந்து
    செய்தால் மிகவும் சிறப்பாக செயல்படும்.மனதை கடந்து சென்று அனுபவம் பெறுவதே இது..

    பதிலளிநீக்கு
  4. //ரொம்போ கஷ்டம் சார்!!!!
    You took so many births and not ready to come out of birth cycle. You have enough time to eat sleep reproduce but not knowing your self . what kind of life we are living....

    பதிலளிநீக்கு

Popular Posts