வியாழன், 23 பிப்ரவரி, 2012

சாகத்தலை! வேகாக்கால்!போகாப்புனல்!

"சாகாதகலை அறியேன் வேகாதகாலின் தரம்
அறியேன் , போகாத தண்ணீரை அறியேன்"

சாகாத்தலை! - வேகாக்கால் ! -  போகாப்புனல்!  சாகாத தலை
நாம் செத்தும் சாகாமல் நம்மிடம்  உள்ள உயிர் ஒளி - அது
விளங்கும் இடம் கண்மணி இதுவே சாகாத தலை!  இதை அறிவதே
சாகா கல்வி! சாகாத கலை ! 

வேகாதகால் - நம் கண்மணி - நம் இரு கண்மணியானது உள்ளே
சென்று சேரும் இடம் அக்னி- ஆத்மஸ்தானம்! கண்மணியிலிருந்து
ஆத்மஸ்தானம் வரை உள்ளது ஒரு நாடி! அது கண் கருவிழியினுள்
பிராண நீரில் உள்ளது! கண்மணி ஒளி உள் ஊடுருவும்போது பிராண நீர்
கொதித்து ஆவியாகும்! அது மட்டுமே ஆவி - ஒளியே அக்னி கலை அடையும்! இது தவ அனுபவ நிலை! இதுவே வேகாத கால்! வெந்துபோய் விடாது!

போகாத புனல் - கண்மணி உள் நாடி வழிபுனல் நீர் போகாது!? அனலே
போகும்!? நீராவியே - ஒளி போகும்! அந்நிலையே அது மட்டுமே போகும்!
அங்கிருந்து நீர் போகாது! அதனால்தான் "போகாப்புனல்"!

சும்மா இருந்து தவம் செய்பவருக்கே இவ்வனுபவம் கிட்டும்! ஒருவர்
ஞானசாதனையாளரா என தெரிந்து கொள்ள சில சொற்களை கூறி
தெரியுமா என்பர்? தெரிந்தால் அவர் பதில் சொல்வாரல்லவா ?
தெரியாதவர் பேந்த பேந்த விழிப்பர்? பரிபாசையாக இரகசியமாக
கூறியதே இச்சொற்கள்! "மெய்ப்பொருள்!", சாகாத்தலை! வேகாகால்!
போகாப்புனல்! கருநெல்லி! திருவடி! திருச்சிற்றம்பலம்! திருவாடுதுறை !
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!

ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கன்னியாகுமரி

----------------------------------------------------------------------------------------------------------------
தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

1 கருத்து:

  1. அன்புள்ள அய்யா ,
    தங்களின் இன்றைய பதிவு எளிமையிலும் ,புரியாத புதிர் .தாங்களுக்கு ,எனது மனமார்ந்த நன்றிகள்

    பதிலளிநீக்கு

Popular Posts