சனி, 2 மார்ச், 2013

ஜோதி ஐக்கூ


101 ஐக்கூ  கவிதைகள் 101 தெய்வ திருவுருவங்கள் தாங்கி வருகிறது.

முதலில் ஆதிகுரு ஸ்ரீ தட்சணாமூர்த்தி ,

இரண்டாவது ஆதி சித்தர் ஸ்ரீ சிவன்,

மூன்றாவது சித்தன் ஆகிட அமுதம் தரும் தாய் வாலை கன்னியாகுமரி  ஸ்ரீ பகவதி அம்மன்

நான்காவது சித்தன் என உறுதி தரும் தேவ சேனாதிபதி செந்திலாண்டவர்

ஐந்தாவது கலியுக காவலன் ஞானவான் சிரஞ்சீவி ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஆறாவது பக்தன் சொல்ல பரமன் எழுதிய ஒப்பற்ற திருவாசகம் உரைத்த
ஞானி ஸ்ரீ  மாணிக்கவாசகர்

தொடர்ந்து 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் 20 சித்தர்கள் ஆக 101 தெய்வ திருஉருவங்கள் - இந்நூலை அலங்கரிக்கின்றது. இது அடியேன் செய்த புண்ணியமே!

ஜோதி ஐக்கூ அந்தாதி இரண்டாம் பதிப்பு ஹோசூர் அன்பர்களால் வெளியிடப்படுகிறது. வள்ளலார் அவர்கள் ஆற்றும் ஆன்மீக பணிக்கு உறுதுணையாக இருக்கிறார் என்பதை உணர்கிறேன்!

என்னையும் ஒரு பொருட்டாக கருதி இப்பணி செய்ய வைத்துகொண்டிருக்கும் உலக குரு திருவருட் பிரகாச வள்ளலார் பொற்பாத கமலங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வந்தனம்! வந்தனம்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts