புதன், 1 மே, 2013

நித்தம் பிறந்த இடத்தை தேடுது மனம்!!


சிற்றம் பலமுஞ் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலந்தேடி விட்டோமே - நித்தம்
பிறந்திடத்தை தேடுதே பேதைமட நெஞ்சம்
கறந்திடத்தை நாடுதே கண்  - "பட்டினத்தார் "





ஆன்மாக்களே , இந்நூலை(கண்மணி மாலை) நீங்கள் சரியாக படித்து உணர்திருப்பீர்களானால் இந்த பாடலுக்குரிய ஞான விளக்கத்தை சரியாக புரிந்து கொள்வீர்கள்!

அதை விடுத்து இந்த பாடலை நீங்கள் ஆபாசமாய் நினைத்தால் உங்களுக்கு இது எதுவுமே புரியவில்லை என்று பொருள். சிந்தித்து பாருங்கள். சிற்றம்பலமும் சிவனும்  அருகிருக்க - சிற்றம்பலம் ஆகிய கண்ணும் அதில் ஒளியாக நின்றிலங்கும் சிவனும் அருகிருக்க வெற்றம்பலந்தேடி விட்டோமே - ஒன்றும் இல்லாத வெருமையான வெளியிடங்களை தேடி விட்டோமே; நித்தம் பிறந்த இடத்தை தேடுகிறது. நாம் பிறந்த இடம் எது?

நாம் ஜீவாத்மாக்கள் அல்லவா? நாம் பரமாத்மாவிலிருந்துதானே பிறந்தோம்! நமது பேதை மனம் தினமும் நாம் பிறந்த இடமாகிய பரமாத்மாவையே தேடுகிறது எனக்கூறுகிறார்! கீழான இடத்தை நினைக்காதீர்கள்.கறந்திடத்தை நாடுதே கண்- நமது சூரியனும் சந்திரனும் ஆகும் அல்லவே?  இந்த இரு ஒளிக்களைகளும் அகமுகமாக அக்னி கலையோடு கூடும் போது நாம் நம் ஜீவனை ஒளியாக நம் முன்னே காணாலாம்! நாதத்தொனி கேட்கலாம்! பின்னர் நமக்கு இறைவன் பிரசாதமாக சகஸ்ராரத்திலிருந்து அமுதம் சொட்டும். அந்த மங்காத பால் கறக்கும் இடத்தையே நம் கண் நாடுதே என பட்டினத்தார் கூறுகிறார். எவ்வளவு உயர்ந்த ஞானம்! தவறாக பொருள் கொண்டு மோசம் போகாதீர். எல்லா ஞானவான்களும் மிக உயர்ந்த பொருளையே - இறைவனையே - அடையும் வழியை கூறுகின்றனர்.

எனவே "மெய்ப்பொருளை " உணருங்கள் ! "திருவடியை" சரணடையுங்கள்! "கண்மணிமாலை" யைப்பற்றி கனிந்து நில்லுங்கள் ! மரணமிலா பெருவாழ்வு வாழலாம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி

மே தினத்தன்று ஓர் சங்கல்பம் செய்வோம். நம் உயிரை காண, தன்னை உணர பாடுபடுவோம். வாழ்வில் உள்ள அணைத்து பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைப்போம். நமது கர்ம வினையே நமது உயிரை மறைத்து உள்ளது. அதுவே வாழ்வில் உள்ள அணைத்து துன்பத்துக்கும் காரணம். அதை நாம் செய்யும் தவத்தின் மூலம் அழித்து, உயிரை கண்டு - நம்மை கண்டும் பேரின்பமாக வாழ்வோம்.
திருவடி உபதேசம் தீட்சை பற்றி தெரிந்து கொள்ள 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts