ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

பொன்விழாவின் போது அன்பர்கள் வழங்கிய வாழ்த்துப்பா

பூரணமாய்ப்  பூத்தெழுந்த புண்ணியமெய்  மாமலரின்

புகழ்விளங்க வந்த அய்யனே

புருவநடுப் பொட்டினிடைப்  புத்தமுதப் புனல்பெருகப்

புதையலான ஞான மெய்யனே

மாரணத்தை வெல்லுகின்ற மாமணியின் சாட்சிதனை

மானுடர்க் களிக்க எண்ணியே

மாதவத்தி லாழ்ந்துஞான மன்றிலேறி  கனிபறித்த

மாகுரு சிவசெல்வராஜரே

காரணமாய் நான்குயுகக் காரியமும் ஆற்றிடவே

கருமணியுள்  கனலு மாகியே

கருவரையும் கல்லரையும் காத்தருளும் கடவுளெனக்

கண் கலந்த வான வட்டமே

ஆரணமாய்ச் சிரசிடையில் அகரமாகி நின்றொளிரும்

ஆஃத்துணர்த்த வந்த வந்த செல்வமே

அடிபிடிக்க அமரமென்ற அறிவுணர்த்தி ஞானமீயும்

அற்புத மெய்ஞான குருபரா ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts