திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இறைவன் எங்கே?

உடம்பூர் பவத்தை ஒளித்தருளும் மேன்மைக்
கடம்பூர்வாழ் என்இரண்டு கண்ணே

எத்தனையோ பிறவி எடுத்து உடம்பைப் பெற்று மனிதனாகப் பிறந்து இறந்து பிறந்து செய்யும் வினைகளை ஒளித்தருள்பவன் இறைவன் ஒருவனே. அவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். பார்க்கும் இடத்திலேதான் உள்ளான். மேன்மை வாய்ந்த கடம்பூர் தான் இறைவன் இருக்கும் ஊர். கடம்பூர் - கடம் ஆகிய ஊர் ! கடம் என்றால் உடல். கடத்தில் உள்ளே இருப்பதால் தான் கடவுள் என்று பெயர். உடலில் இரண்டு கண்களில் கண்மணியில் மத்தியில் ஊசிமுனை துவாரத்தின் ஒளியாக (தன்னைக் காட்டாது மறைந்து நின்று) துலங்குகிறான் இறைவன்...!

1 கருத்து:

Popular Posts