ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

பிரம்ம முகூர்த்ததில் ஆத்ம விசாரம்


மூலமாம் குளத்திலே முளைத்தேழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அருப்பீறேல்
பாலனாகி வாழலாம் பரப் பிரம்மமாகலாம் 



மூலம் என்றால் கண். அங்கே நீர் இருக்கிறதல்லவா ?
அதனால் தான் கண்ணை மூலமாகிய குளம் என்கிறார். இந்த குளத்தில் வேண்டாத  கோரைப்புற்கள் முளைக்கின்றன. அதை நாலு கட்டு அறுத்து தள்ளச் சொல்கிறார். காலையில் எழுந்து செய்ய வேண்டுமாம் ?

 நமது மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் அந்தகரணம் நான்கினாலும் எழும் காம குரோததிகளாகிய துர்குணங்களையே விசாரித்து ஆத்மா விசாரம் புரிந்து நான்கையும் அறுத்து வெளியேற்றவேண்டும்.


மனம் சித்தம் புத்தி அகங்காரமாகிய இந்நாலு கட்டுகளும் நம்மை பற்றாது
இருக்க தினம் தினம் காலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து ஆத்ம விசாரம் -சாதனை செய்ய சொல்கிறார். அங்ஙனம் நாம் நம்மிடம் உருவாகும் கோரையாகிய துர்குணங்களை அகற்றுவோமானால் பாலனாகி வாழலாம் என்றும் இளமையோடு வாழலாம். பரப் பிரம்மமாகி வாழலாம் என்கிறார்.

கண்மணிமாலை - ஞான சற்குரு சிவசெல்வராஜ்
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts