புதன், 17 செப்டம்பர், 2014

வள்ளல் பெருமான் உங்களுள் பிரவேசிக்க

வள்ளல் பெருமானே உலக மக்களை ஆட்கொள்ளும் கருணை வள்ளல்!
"இப்போது யாம் இங்கிருக்கிறோம் இனி எல்லோர் உள்ளத்திலும் கலந்து கொள்வோம்" என மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டு கொள்ளுமுன்  கூறியருளினார்! இதன் அர்த்தம் என்ன? யார் தீட்சை பெறுகிறாரோ ஞான சற்குருவிடம் வருகிறாரோ, அவர் கண் வழி , தீட்சையின் மூலம் உள் பிரவேசிக்கிறார்! தீட்சை பெறுவர் அக்கணம் முதல் வள்ளலாரின் பிள்ளையாகிறார்! அக்கணமே தீட்சை பெற்றவரின் மறுபிறப்பாகும்! அவனே துவிஜன் !  இரு பிறப்பாளன்!
மறுபடியும் பிறந்தவனாகிறான்! அக்கணம் முதல் வள்ளலார் அந்த சீடரின்
கூடவே துணையாக இருந்து காத்தருள்வார்! ஞானம் பெற வழி காட்டுவார்!
கர்மங்களை தீர்த்து ஞானியாக்கியருள்வார்! வள்ளல் பெருமான் உங்களுள்
பிரவேசிக்க நீங்கள் இப்போது இருக்கும் ஒரு ஞான குருவை சந்தித்து
சரணடைக!

குருவருளின்றி திருவருள்கிட்டது! குருவின் சொல்லே வேதம்! குருவை பணிவதே குருவின் மகத்துவம் பேசுவதே குருவை நினைப்பதே குருவுக்கு
தொண்டு செய்வதே குருவே கதி என இருப்பதே ஞானம் பெற எளிய வழியாகும்.

ஞான சற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts