ஞாயிறு, 23 நவம்பர், 2014

மேல் மூலம் - நமது கண்!

அறிகின்ற மூலத்தில் மேல் அங்கி அப்புச்
செறிகின்ற ஞானத்துச் செந்தாள் கொளுவிக் - திருமந்திரம் 452

நாம் அறிகின்ற மேல் மூலம் - நமது கண்! நாம் அறியாதது தான்
குதத்துக்கும் குய்யத்துக்கும் நடுவுள்ள மூலம்! அறியாததை விட்டுவிடு
அதுயோகம்!

அறிந்ததை பார்? பார்க்க முடிந்ததே மேல் மூலம்-கண்!
கண்ணில் தான் அங்கி-நெருப்பு  உள்ளது. அங்கேதானே நீரும் உள்ளது!
நீர் உள்ள கண்ணே தவத்தால் சிவந்து செந்தாள் சிவந்த திருவடி எனப்படும்!

அந்த செந்தாள் கொளுவி பிடித்துள்ளது கண்மணி ஒளியை!கொக்கி
போட்டு பிடித்து வைத்துள்ளது. மாட்டி வைத்துள்ளது. தமிழ் வேதம்
திருமந்திரம்! தமிழின் எல்லா சொற்களையும் அழகாக கையாள்கிறார்!
திருமூல நாயனார்!

நீர் மேல் நெருப்பாக இருப்பவன் இறைவன்! கண்
கருவிழி உள் பிராண நீரில் சுழலும் மணியுனுள்ள இருக்குது நெருப்பு !
எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் இறைவன்!

மந்திர மணிமாலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts