சனி, 20 டிசம்பர், 2014

கண்ணன் - என்னை சரண் அடைந்தவன் கர்மாக்களை

கண்ணன் உபதேசமாம்  பகவத் கீதையில், என்னை சரண் அடைந்தவன் கர்மாக்களை நான் ஏற்று கொள்கிறேன்! சம்சார சகாரதில் மூழ்காமல் காப்பற்றி கரை செய்கிறேன்! மானுடா நீ உன் கர்மாவை செய் பலனை என்னிடம் விட்டுவிடு என்று தானே கூறுகிறார்!!

அனைத்தையும் 'கிருஷ்ணார்ப்பணம் பண்ணிவிட்டால்' நமக்கேது வினை? நமக்கு வினையில்லா விட்டால்  பிறவி வராதே!  பிறப்பு  இறப்பு  எனும்  சுழலிலிருந்து  விடுபட  அனைத்தையும்  கண்ணனிடமே  ஒப்படைத்து 
பரிபூரண  சரணாகதியாகி  விட்டால்  போதும் !

கண்ணன் எங்கே என்று ஊர் உலகமெல்லாம் தேடாதே! இந்த பிரபஞ்சம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள  பரமாத்மா! அங்கு இங்கு எனாதபடி எங்கும் இருக்கும் அந்த இறைவன் மனிதனிலும் இருப்பான்தானே!
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்! மனித உடலிலும் இருப்பன் அல்லவா?

இருக்கிறான்!! மனித தேகத்திலும் அந்த பரமாத்மா துலங்குகிறார் என்பதை இது வரை உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் கூறியுருக்கின்றனர் !! இது தான் ஞானம்!!


கண்ணன்  மனித தேகத்தில் எங்கு எப்படி செயல்படுகிறான் என அறிந்து அந்த கடவுளை அடைய பாடுபடுவதே தவம்! அறிந்து தெளிந்து உணர்பவனே ஞானி! 


ஞான சற்குரு சிவசெல்வராஜ்
பரம பதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts