வெள்ளி, 23 அக்டோபர், 2015

மாயையை வெல்ல யாரை பணிவது?

சக்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கு நாயகி என்ப தறிகிலர்
பத்தியை பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போற் கதறுகின் றாரே!


















சக்தி - வாலை-கன்னி ய குமரி - பாலா - அகிலாண்ட
கோடி பிரம்மாண்ட நாயகி - மனோன்மணி தாய் நமது
இடதுகண்ணாக சந்திர கலையாக மணி ஒளியாக
துலங்கும் பெண்பிள்ளை! அவள் நமக்கு சாதகமாகவே
 இருப்பாள்! அம்மா தாயே நீயே கதி உன் பாதம் கதி
என சரணடையுங்கள்! அவள் சகாயத்தால் சற்குருவை
பெற்று தவமுறை அடைந்து வைராக்கியத்துடன்
தவம் செய்து அவளே முக்தியடைய அமுது தருவாள்
முக்திக்கு நாயகி என்பதை அறியலாம் உணரலாம்
அடையலாம்! தாயை அறியாதவர்கள் தாயை பணியாதவர்கள் மாயையிற்சிக்குண்டு பக்தி நெறி அறியாமல் பாழாய் போவர்!
அதுமட்டுமன்றி தான் தான் பெரியவன் என நாய் போல்
கத்துவர் முட்டாள்கள்!  என திருமூலரே கூறுகிறார்!
சக்தியை பணிந்தால் உனக்குள் சக்தி பிறக்கும்! ஞானம் பெறலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts