செவ்வாய், 1 மார்ச், 2016

திருவுந்தியார்


சிவபெருமானின் திருவிளையாடற்களை, பிரதாபங்களை கூறி பாடியாடும் மகிழ்ந்தாடும் பாடல்கள்! இங்கு ஞான நிலைகளே மறைவாக சொல்லப்படுகிறது!

வளைத்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா று ந்தீபற
வில் வளைந்தாலே அம்பு எய்த முடியும்!?வில்லிலே அம்பை
வைத்து எப்படி விடுவார்கள்! வில்லிலே கட்டப்பட்ட நாண் -கையிற்றை
பின்னாலே இழுப்பர்!அப்போது தான் அம்பு விடும்போது முன்னால் வேகமாக
போகும்! அது போல் நம் இரு கண் நாண். உள்ளே அக்னி கலையில்  சேரும்போது சக்தியுடன் அம்பு போல வளைத்தால் விளையும் பூ என்கிறார்! கண்மலர் ஒளியால் ஒளி மிகுவதால் விளையும்! சல்லென பாயும் ஒளியால் முன் நிற்கும் முப்புரம் - மும்மலத்திரை எரிந்து போகும்! இது தான் ஞானம்! இதற்க்கு எது காரணம்!? உந்தீ பற உள் - தீ - பற்றி எரிந்து பறந்து வந்து மும்மலத்திரையை எரிக்கணும்! எல்லாமே
வெந்து சாம்பலாகணும் மும்மலம்  அற்றாலே பிறவிப்பிணி நீங்கும்!

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே மும்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற

முப்புரம் எரித்த சிவன் கையில் இரண்டு அம்பு இல்லை!
ஏகம்பமாய் ஒரே- நீண்ட - கம்பம் போன்று ஒளி பெருகியவனாய்
இருக்கும் சிவம் தன்கையில் ஒரு அம்பே வைத்துள்ளார்! நம் இருகண்களே 
வில்! உள் அக்னி கலையே  வில் நாணை பின் இழுத்து சேர்க்கும் இடம்!
நாண் பின் குவியும் இடம்! அந்த ஓர் அம்பே, ஓரம்பே முப்புரம் எரித்தது!
சிவன் புன்னகைத்தார்! என்பது  கண்மணி வாய் திறந்து ஒளி பிறந்தது
மலம் எரிந்தது ஞான அனுபவமே!

பார்ப்பதி யைப்பகை சாற்றிய தக்கனை

பார்ப்பது - பார்ப்பது எது கண் தானே! அந்த கண்ணின் பதி -
தலைவன் கண்ணிலே பதிந்திருப்பவன் சிவம் தானே! ஒளிதானே !
அந்த சிவத்தை பகைத்த தக்கனை அழித்தார் சிவமே! சிவத்தை
தூஷித்த தக்கன் சிவத்தாலே அழிந்தான்! நாம் சாப்பிடும் ஆகாரம்
சத்தாகி அவிப்பாகமாகி நம் ஆவியோடு சிவத்தோடு சேரும்! இல்லையேல்
நாம் சவம்!

திரு
               வாசக மாலை
மணி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts