வெள்ளி, 25 மார்ச், 2016

சன்மார்க்க நெறி நடக்காதவரைக்கும் துன்பமே

ஆயத்துள் நின்ற அறுசமயங்களுங்
காயத்துள் நின்ற கடவுளை காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்று பதைக்கின்ற வாறே

வெறும் சடங்கு சம்பிரதாயங்களை கூறும் ஆயக்கட்டுகளான
அறு சமய நூற்கள் உலக மக்களுக்கு பிரயோஜனம் இல்லை!
நேரம் போகாதார்கள் பேசலாம் படிக்கலாம்! இது போன்ற
இன்றைக்கும் உருப்படாத சாமியார்கள் பலர் உள்ளனர்! கேடு
கெட்ட ஆசிரமங்கள் பல உள்ளன! கஷ்டம்!

காயமாகிய உடலில் நம் உயிராக இருப்பது அந்த இறைவன், பேரொளிதான்
நம் கண் வழி தவம் செய்துதான் காண முடியும் என்பதை அறியாதவர்கள்
அவர்கள்! கண்ணிருந்தும் குருடர்களே!

அப்படிப்பட்ட அறிவிலிகள் மாயை எனும் மும்மல சகதியில்
விழ்வர்!  வினையால் அலை கழிக்கப்படுவர்! வீடு வாசல் மனைவி
மக்கள் என்ற பாசம் வைத்து நாசம் அடைவார்!

அறியாமையால் உழலும் அவர் பதைபதைப்புடன் பரிதவிப்புடன் தான் வாழ்வார்! நிம்மதி என்பதே இருக்காது!  உண்மை ஞானம் அறியாதவரைக்கும் சன்மார்க்க நெறி நடக்காதவரைக்கும் துன்பமே, சோகமே அவர் வாழ்க்கை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts