சனி, 5 மார்ச், 2016

பரம்பொருளே தன் ஜீவன் - எப்போது உணர்வது?

பற்றறப் பற்றிற் பரம்பதி யாவது
பற்றறப் பற்றிற் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினிற் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றிற் பரம்பர மாகுமே.



ஒரு சிறிதும் பிரிவிலாது உலகப்பற்று சிறிதும் இல்லாது
நம் திருவடிகளை மட்டும் பற்றினால் அதுவே பரம்பொருள்
நம்பதி என அறிந்து கொள்ளலாம்! அங்ஙனம் புறப்பற்று நீங்கி
அகப்பற்று ஒன்றே சதா காலமும் கொண்டு சாதித்தால்
உள் இருக்கும் பரமே ஒளியே , அறிவே நாம் எனவும் , அதுவே சாட்சாத்
பரம் பொருள் எனவும் அறிந்து கொள்ளலாம்!அப்படி பற்றற
பற்றுபவர்க்கே திருவடியை பற்றுவோர்க்கே வேறு பற்றின்றி திருவடி
ஒன்றையே பற்றினால் பிரபஞ்சமெங்கும் நிறைந்த பரம் பொருளே
தன் ஜீவன் என்பதை உணர்வான்! அறிவான்! உய்வான்! 

1 கருத்து:

Popular Posts