செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மனம் இருக்கும் இடம்?

நம் மனந்தான் நம் வினைப்பயனை அனுபவிக்க காரணமாகிறது!
மாயையின் முழு ஆக்கிரமிப்பில் தான் மனம் உள்ளது!

அது வினைக்கு தக்க படி நம்மை ஆட்டிப்படைக்கிறது! நம் மனம் ஓர் அடர்ந்த பெருங்காடு  போன்றது! உள்ளே போக போக விரிந்து கொண்டே போகும்!

இதை இன்னொரு சித்தர் பெருமகனார் ஊசிமுனை காட்டிற்குள் உலாவியே
திரியலாம் வாரீர் என கூப்பிடுகிறார்!? அந்த மாயை சூழ்ந்த காடு
மனமாயை காடு எங்கு உள்ளது தெரியுமா? கண்ணின் முன்னால்!

கண்ணின் கருவிழியின் - கண்மணியின் முன் மெல்லிய ஜவ்வாக
உள்ளது நம் மனம் இருக்கும் இடம் கண்மணியின் முன்பாகவே!

கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு துவாரம் உள்ளது!
அதை மறைத்து கொண்டிருப்பது மாயை திரையான மனத்திரை உள்ளது!

ஊசி முனை ஓட்டையின் உள்ளே பெருங்காடு இருப்பதால் தான்
சித்தர் பெருமகனார் "ஊசி முனை காட்டிற்குள் உலாவியே இருக்கலாம்
பாரீர்! வாரீர்! என அழைக்கிறார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts