வெள்ளி, 15 ஜூலை, 2016

பக்தியால் ஞானத்தை காட்டி

"பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை கூட்டும் " என்பதே ஆன்றோர்  வாக்கு! பக்தி முத்தினால் ஞானம்!ஞானம் முத்தினால் முக்தி! ஒளியுடல்! கண்ணிலே  மணியிலே ஒளியிலே பக்தி செலுத்து! அன்பு செலுத்து! அவிலே அன்பு - அன்பு உ செலுத்து ! அவிலே உ வை செலுத்து அதுவே ஞானத்தில் பக்தி! ''அ வாகிய சூரியன் ஊடுருவ வேணும் 'உ'விலே சந்திரனிலே!

"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ
முக்திக்கு மூலம் அது "

அவ்வை பாடியருளிய அமுத மொழி இது! வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம்
என்றார்! உன் ஜீவனை கருணையோடு பார் தவம் செய் அதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார்! உன் ஜீவனை கருணையோடு பார் தவம் செய் அதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம்!  எண்ணிலா பிறவி துன்புறும் உன் ஆத்மா இளைப்பாற இறைவன் திருவடியை அடைய உன் ஜீவனை கருணையோடு பார்! ஜீவன் துலங்கும் கண்ணை அன்போடு
கருணையோடு பார்! பார்க்க பார்க்க தெரியும் ஜோதியே! இது பற்றி தான் வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற ஒரு நூலையே இயற்றினார்! சன்மார்க்கிகள் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் "ஜீவகாருண்ய ஒழுக்கம்"!  சாப்பாடு போடுவது அல்ல ஜீவகாருண்ய ஒழுக்கம்! சாப்பாடு போடுவது ஒரு பெரிய விஷயமே அல்ல! யாரும் போடலாம்!!
எங்கும் போடலாம்!

வள்ளலார் வந்தது  ஞான தானம் செய்யவே! மரணமிலா பெருவாழ்வு உலகுக்கு உணர்த்தவே! அதற்காகத்தான் கட்டினார் சத்திய ஞான சபை! வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் காண வாருங்கள்
என கூவி அழைத்தார் உலகரையெல்லாம்! இதுகூட புரியவில்லை எனில்  இன்னும் புரியவில்லை  எனில் அந்த வள்ளலார் தான் இந்த சன்மார்க்கிகளுக்கு புத்தி புகட்ட வேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts