வியாழன், 14 ஜூலை, 2016

வள்ளலார் ஜோதி ஆனாரா?


வள்ளலார் ஜோதி ஆனார் என்பதை சிலர் ஏற்க மறுக்கின்றனர்! முட்டாள்கள்! எத்தனையோ  மகான்கள் ஞானிகள் ஜோதி ஆனார்களே தெரியாதா?
ஆண்டாள் திருவரங்கத்தில் ஜோதியானார்!
மாணிக்க வாசகர் சிதம்பரத்திலே  ஜோதியானார்!
பத்திரகிரியார் திருவிடைமருதூரிலே ஜோதியானார்.

இதுபோல எத்தனையோ ஞானிகள் ஒளியுடல் பெற்றார்களே! ஒளியாகி அருட்பெருஞ்சோதியாம் இறைவனோடு கலந்தார்களே!

அது மட்டுமா, திருஞான சம்பந்தர் தன் திருமணத்திற்க்கு வந்த
அனைவரோடும் "கூண்டோடு கைலாசம்" ஜோதியானார்களே! எவ்வளவு பெரிய ஆற்றல் இது! தான் மட்டும் ஜோதியாகாமல் தன்னோடு சேர்ந்தவர்களையும் ஜோதியில் கலக்க வைத்தாரே
எவ்வளவு பெரிய அற்புதம் இது! எவ்வளவு பெரிய  ஆற்றல் இது! யாருக்கு கிடைக்கும் இவ்வரிய பேறு! யார் பெறுவர்?   இன்னும் எவ்வளவோ ஞானிகள் ஜோதியாகியுள்ளனர்!

இதுபோலவே  19- நூற்றாண்டிலே 1874-ம் வருடம் தைப்பூச நன்னாளிலே முன்னிரவிலே ஜோதியானார் நம் வள்ளல் பெருமான்! "ஊன உடலே ஒளியுடலாகா ஓங்க பெற்றேன்" என பாடுகிறார் வள்ளல் பெருமான்!
நம்பினால் நம்புங்கள் "பெற்றேன் இறவாமை" என்றும் பாடினார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts