ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 2


சத்தியம்
தன்னை அறிந்தாலே
தலைவனை அறியலாம் சத்தியம்

சத்தியம்
ஒழுக்கம் பண்பாடு
உள்ளவரே உள்ளவரை அறிவார்

அறிவார்
உண்மை குருவை
மெய்ப்பொருளை நாடியே பெறுவார்

பெறுவார்
தீட்சை தசம்
அறிவால் அறிவர் குருவை

குருவை
காரணமும் காரியமும்
பெற்றவரே அடைவர் ஞானம்

ஞானம்
பரிபூரண அறவே
நன்றாக உணர்ந்து கொள்ளே

கொள்ளே
ஞானிகள் நவின்றதை
அறிவில் தெளிவு கிட்டும்.

கிட்டும்
மரணமிலா பெருவாழ்வு
வாழ்வாங்கு வாழலாம் நாமே

#‎ஞானசற்குரு‬

ஜோதி ஐக்கூ அந்தாதி - 1                   ஜோதி ஐக்கூ அந்தாதி - 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts