வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 4

இல்லையே
இருவினை துன்பங்கள்
இதயத்தில் இறைவனை கண்டால்

கண்டால்
கண்ணனின் ஒளியை
கண்மணியை எண்ணிப்பார்த்தே

பார்த்தே
இருக்க வேண்டும்
பரமன் நடனம் காணலாம்

காணலாம்
காணாத காட்சிகளை
கண்டு மேலே செல்லலாம்

செல்லலாம்
சீவன் முகத்தராகியே
சிவனும் சீவனும் ஒன்றாகியே

ஒன்றாகியே
வரவே பாடுபடு
முச்சுடரும் சேர்ந்தாலே முக்தியே

முக்தியே
முடிவான நிலையாகும்
மூன்று தீயே ஆரம்பமாகும்

ஆரம்பமாகும்
உணர்வு சூட்டை
எண்ணி எண்ணி கூட்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts