புதன், 31 ஆகஸ்ட், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 6

வாழ்வே
வழி காட்டி சென்றனர்
வாழையடி வாழையென ஞானியர்

ஞானியர்
பலவாறு பகர்ந்தது
சிந்தித்து உறுதி பெறுவதற்கே

பெறுவதற்கே
நாமும் பிறந்தோமே
பேதமை நீங்கி பார்ப்பீரே

பார்ப்பீரே
உலகை ஒன்றாகவே
ஆன்ம நேயம் வளரனும்

வளரணுமே
அறிவு அன்பு
சீவ காருண்யம் அனைவரிடமும்

அனைவரிடமும்
அன்பு பாராட்டினால்
உயிர்கள் கை கூப்பி தொழும்

தோழும்
பக்தியோடு சரனாகியே
பரகதி உனக்கு உண்டே

உண்டே
கண்டித்ததை தவிர்த்தே
பசிக்கு புசித்து வாழ்வாயே

வாழ்வாயே
பாரோர் மெச்சிடவே
பகலவனை பற்றி நில்லே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts