புதன், 10 ஆகஸ்ட், 2016

காணுகின்ற பொருட்களில் ஞானம்


நமது மூதாதையர்கள் நாமெல்லாம் ஞானம் பெற வேண்டி வாழ்க்கையின் எல்லா நிலையிலும் காணுகின்ற பொருட்களில் ஞானம் விளங்கும்படி எல்லாவற்றையும் அமைத்து வைத்தனர்.பல ஊர் பெயர்கள்  மெய்ப்பொருள் விளக்கம்.

திருக்கண்ணபுரம் ,எண்கண், எட்டுக்குடி, திருவாவடுதுறை, குறுங்குடி,இப்படி ஊர் பெயர்கள் திருவாகிய இறைவன் குடியிருப்பது கண் ஆகிய இடத்தில் அது திருக்கண்ணாபுரம்! எண் ஆகிய எட்டும் இரண்டும் கண் எனக் குறிக்கும் எண்கண்! எட்டுக்குடி என்பது எட்டாகிய கண்ணில் குடியிருக்கும் இறைவன்!திருவாகிய ஜோதி ஆடிக்கொண்டு இருக்கும் இடமே
திருவாவடுதுறை! ஊசிமுனையளவு குறுகிய சின்ன இடத்தில் குடி இருப்பவன் இறைவன்  எனவே குறுங்குடி! இப்படி ஊர் பெயரும் மெய்ப்பொருள் விளக்கமே!

தாம்பரம் - தாம் அதாவது நாம் தான்பரம் என குறிக்க வந்ததே தாம்பரம்.! சிதம்பரம் -சின்ன அம்பரம் சின்னக்கோவில் அதுதான் சிதம்பரம்.

கண்ணன் என்ற பெயர் மெய்ப்பொருளே! கண்ணாகியை அவன் - கண்ணன் - கிருஷ்ணமணி ! கண்மணி! கணபதி - கண்ணில் பதி கண நாயகன்!  திருக்கண்ணை மங்கை! நேத்திர தரிசனம் திருப்பதியில் கண்டவர் மோட்சம் பெறுவார்! நேத்திரம் நயனம் என்றாலும் கண். உபநயனம் ஒரு
சடங்கு. பூணூல் பூட்டு வைபவம்! துணை , இரு என்பது உப எனப்படும். நயனம் என்றால் கண். இரு கண்ணைப்பற்றி அறிவிப்பதே உபநயன வைபவத்தின் நோக்கம்!

ஊர் புறங்களில் வீட்டில் உள்ளவர்கள் பக்கத்தில் எங்காவது போய் வர வேண்டுமானால் சொல்லிக்கொண்டு போவர்! எப்படி தெரியுமா? இரண்டு எட்டு போய் வர்றேன் என்பர்! இரண்டும் எட்டும் இரு மெய்ப்பொருளை குறிக்கும் சங்கேத வார்த்தைகள்! இதெல்லாம், நம்  அறிவுக்கு எட்ட வேண்டும் புலப்பட வேண்டும், ஏட்டை மெய்ப்பொருளை பிடித்தால் எட்டிவிடலாம் இறைவனை பரம்பொருளை!

இறைவன் எங்கோ எட்டாத உயரத்தில் இல்லை. தூரத்தில் இல்லை. கூப்பிடுதூரத்தில் கைக்கு எட்டிய இடத்தில தான் எட்டாக இரண்டாக மெய்ப்பொருளாக உள்ளார்.

இதுவரை இந்த உலகில் எல்லோரும் மெய்ப்பொருள் பரம்பொருள் கண்ணில் மணியில் ஒளியாக உள்ளார் என்பதை இரகசியமாகவே மறைத்தே சொல்லி வந்துள்ளனர். திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆசியாலும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும் இந்த உலகத்திலேயே அடியேன் தான் முதல் முதலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்தி நூலாக வெளியிட்டுள்ளேன்!

மெய்ப்பொருளை சொல்லாத ஞானிகளே இல்லை! ஆனால் எல்லோரும் மறைபொருளாக பரிபாசையாக சூட்சுமமாக குருமூலம் அறியக்கூடிய வகையிலே உள்ளது! உலகர் அனைவரும் ஞானம் பெற, மெய்ப்பொருள் அறிய உணர அடியேனை கருவியாக்கி இதோடு 24 ஞான நூற்களை
எழுத வைத்து மெய்ப்பொருளை வெளிப்படுத்தியுள்ளனர்! எல்லா ஞானிகளின் அருளும் அடியேனுக்கு துணை நிற்கிறது! இயேசு பெருமானும் நபி பெருமானும் வள்ளல் பெருமானும் உபதேசித்தது ஒன்றே ! ஒன்றே! நன்றே! மெய்ப்பொருளே!

கண்ணே என மணியே என நம் குழந்தையை கொஞ்சுகிறோம்! காதலன் காதலியை கண்ணே என்கிறான்! கணவன்  மனைவியர் கண்ணே என்பார்கள்! பெற்றோர், பெரியோர் பாதம் தொட்டு கண்ணில் ஒற்றி கொள்கிறோம்!

கோயிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக்கொள்கிறோம்! கண்காண்ட தெய்வம் என பெற்றோரை முதலிலும் கண்ணில் கண்ட தெய்வத்தை  குரு அருளால் பின்னரும் கண்டு உய்கிறோம்! கண் அவனே கணவன்உலகில் பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்! ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது!  பரம்பொருள் நம்கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது!

மெய்ப்பொருள் உபதேசம் தீட்சை பெற்றவனே துவிஜன்! மீண்டும் பிறந்தவன்!
மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்பவரே பிறவாநிலை பெறுவார்! இறவாநிலை அடைவர்! மெய்ப்பொருளை சொல்லி புரிய வைத்து உணர வைப்பவரே ஞான சற்குரு ! தவம் செய்து!  சும்மா இருந்து  தன்னை உணர்பவனே ஞானி!  மரணமிலா பெருவாழ்வு பெறுவார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts