வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சித்தர்கள் அருள் பெற என்ன வழி ?


ஒரு ஆத்மா கடை தேற ஞானத்தை சொல்லி கொடுப்பது தான் சிறந்தது.
ஒரு ஆத்மா எத்தனையோ பிறவி பிறந்து பிறந்து இறந்து இறந்து கஷ்ட படுகிறது அல்லவா ஒரு கோடி கோடியா பணம் கொடுத்தாலும் வீண்.

ஞானத்தை சொல்லி கொடுங்க. ஆத்மா கடைத்தேறும் அல்லவா? அது தான் கோடி புண்ணியம்...

எல்லோருக்கும் சொல்லி கொடுங்க. மறைப்பு எதுவும் இல்லை.
ஒருவன் விஷயத்தை மறைக்கிறான் என்றால் அவனுக்கு தெரியாது என்று அர்த்தம்.

இறைவன் - சித்தர்கள் அருள் பெற என்ன வழி ? அடுத்தவங்களுக்கு ஞானம்
சொல்லி கொடுப்பதுதான்.இதில் ரகசியம் மறைப்பு என்று எதுவும் இல்லை.
எல்லோரும் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கலாம். ரகசியம் சத்தியம்
வாங்குவார்கள். அது எல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை.

இறைவனை பற்றி சொல்லி கொடுத்தால் கேட்டு போவானா? இறைவனை
அடைய தவம் செய்ய சொல்லி கொடுத்தால் கெட்டு போவார்களா?
எல்லோருக்கும் சொல்லி கொடுங்க.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தான் நீங்க நன்றாக இருப்பீர்கள். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

நாலு ஆன்மா நல்லா இருக்கனுமுன்னு ஏதாவது செய்கரீகள் அல்லவா? இது சித்தார்கள் ஞானிகளுக்கு தெரியும். அவர்கள் உங்களுக்கு அருள் தருவார்கள். இந்த பிள்ளை நாலு பேருக்கு வழி காட்டுகிறான் நல்ல இருக்கட்டும். அவர்கள் ஆசிர்வாதம் ஈசி யா கிடைக்கும். அவர்களுக்கு பூசை மற்ற எதுவும் தேவை இல்லை. பரோபகாரம் நாலு ஆன்மா நன்றாக இருக்க செய்ய கூடிய எடுக்க கூடிய முயற்சி தான் அவர்களுக்கு பெரிய சந்தோசத்தை கொடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts