வியாழன், 1 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 7


நில்லே
மனதை நிலை நிறுத்தியே
மணியில் ஊன்றி இருப்பாயே

இருப்பாயே
சும்மா சொல்லற
பசித்து தனித்து விழித்தே

விழித்தே
விமலனை காணலாம்
சங்கற்ப விகற்பங்கள் அற்றால்

அற்றால்
ஏழு திரைகள்
தீப ஒளி காணுமே

காணுமே
கண்கள் வழியாகவே
கடத்தல் புகும் வாசலே

 வாசலே
தொடுவீர் மனதாலே
கண்ணின் மணியை எண்ணுவீர்

எண்ணுவீர்
நினைத்து உணர்ந்து
காணலாம் ஒளியை பலவாய்

பலவாய்
சிந்தையை விடாதீர்
சோதியே கடவுள் அம்சம்

 அம்சம்
எப்போதும் இருப்பீர்
எந்நேரமும் காப்பானே அவனே

#ஞானசற்குரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts