சனி, 3 செப்டம்பர், 2016

ஜோதி ஐக்கூ அந்தாதி - 8

அவனே
உலகில் ஆண்மகன்
நாமெல்லாம் பெண்பிள்ளையே

பிள்ளையே
இறைவனுக்கு எல்லோருமே
அவனிடம் கிடையாது பேதம்

பேதம்
நீங்கினால் பேரின்பம்
அபோதனாய் ஆனந்தமாய் வாழலாம்

வாழலாம்
சன்மார்க்க நெறியிலே
சித்தியெல்லாம் கிட்டிடும் நமக்கே

நமக்கே
நாயகனாவான் நம்பிரானே
நம்பினோர் கெடுவதில்லை நாதனை

நாதனை
நாமுய்ய நாடனுமே
கண்ணின் மணியில் கலந்தவனை

கலந்தவனை
கலந்தாலே மணமே
பஞ்சபூதமும் ஒன்றான பொருளே


பொருளே
மெய்ப்பொருளே கண்ணே
மணியே மூலமே முதலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts