வெள்ளி, 2 செப்டம்பர், 2016

திருவடிகளை விட்டு ஒரு கணமும் பிரியாதிருக்க வேண்டும்!

பொய்யனேன் அகம்நெகக் புகுந்தமு தூறும்
புதும லர்கழல் இணையடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக்  கருத்தினை இழந்தேன்

நாம் எப்படி இருக்கக் கூடாது என மாணிக்க வாசக பெருமான் நமக்கு
அறிவுறுத்துகிறார்! பொய் பேசக்கூடாது! நாம் உள்ளம் உருக
புத்தமுதூறும் புதுமலர் கழல் - கண்மலராகிய இறைவனின்
திருவடிகளை விட்டு ஒரு கணமும் பிரியாதிருக்க வேண்டும்!
நாம் விழித்திரிக்கின்றோம் என்று என்னி உள்ளத்தில் நிலை
நிறுத்த வேண்டிய கருத்தை இழக்காமல், உண்மையில்
உன் மெய்யில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!
இறைவன் திருவடியை நினைக்காத நீ சாவாய்!
சந்தேகமில்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts