வியாழன், 1 டிசம்பர், 2016

வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதிமொழி

மனிதர்கள் காமவசத்தால் கண் ஒளி மங்கி இறப்பர்.

கள்ளுண்டு போதையால் அறிவு மங்கி ஞானம் பெறாது போவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணை அறியாத-கண்மணி ஒளியை-திருவடியை அறியாத மூடர்கள் உபதேசத்தால்- கண்ணை மூடி தியானம் செய்து ஏமாந்து போவர்.

கண்ணை மூடி தியானம் செய்பவர் முடிவில் கண்ணை மூடிவிடுவர்.அதாவது இறந்துவிடுவர்.கண்ணை திறந்து தவம் செய்பவரே கண்மணி உள் ஒளியை காண்பர்.உய்வர்.

கண்ணை திறக்க ஒரு குரு தேவை.குரு இல்லாத வித்தை பாழ்.குரு அருளின்றி திருவருள் கிட்டாது.


நாம் கண்மணி ஒளியில் மனதை நிறுத்தி தவம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் ஐந்து.சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாதீதம் எனப்படும்.நம் கண்மணி சுழற்சி வேகம் தான் இந்த அனுபவம்.துரிய நிலையில் கிடைக்கும் ஒளிக்காட்சியை-எங்குமான ஜோதி நம்முள் திகழ்வதை காணலாம்.


திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதிமொழி இது ;-
மனோ வலிமை இல்லாதவர்களே உலகில் உள்ள வஞ்சகரை அடுத்து ஒன்றும் பெறாமல் திண்டாடாதீர்கள்.பயப்பட வேண்டாம்.குருவாக என்னைக்கருதி என்னுடன் சேர்ந்து திருவாகிய இறைவன் ஜோதி ஒற்றியிருக்கும் கண்மணியில் உள் துலங்கும் வள்ளலார்-இறைவன் திருவடியை வணங்கி சரணடைவோமாக.நான் உங்களுக்கு வேண்டிய யாவும் அந்த அருட்பெருஞ்ஜோதி இறைவனீடம் வாங்கி தருகிறேன்.என்னை நம்புங்கள் என உலக மக்களை அன்போடு அழைக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts