வியாழன், 1 டிசம்பர், 2016

உச்சந்தலையில் உள்ள கோழை

ஆரம்ப கால சாதகர்களுக்கு தவத்தால் பித்தம் கலங்குவதால் அதிகமாக இனிப்பு சாப்பிட தோன்றும்.

உடல் மலத்தில் ஏழாவது ஆதாரமாக சகஸ்ர தளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லப்படுகிறது.

இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம்.இந்த கோழை முழுவதும் நீங்கினாலே நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.

கண்களில் உள்ள ஒளியை உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும்.கண்களில் கனல் பெருகும்..


அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னிக்கலையை அடைந்து அங்கிருந்து மேலே ஏறிச்செல்லும் போது ஞானக்கனல் பெருகிப்பெருகி அந்த
உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும்.எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவு காலம் நாம் கடுமையாக தவம் இயற்ற வேண்டும்.


தவம் செய்யும்போது கண்கள் திறந்திருக்கவேண்டும்.கண் மூடினால் இருள்.திறந்தால் ஒளி.


கண்ணே சரீரத்தின் விளக்கு - பைபிள்.


பேரொளியான தேவனை தரிசிக்கவேண்டுமானால் கண்ணில் உள்ள சிறிய ஒளியை தவத்தால் பெருக்கி உடலை ஒளியாக்க வேண்டும்.உச்சி முதல் உள்ளங்கால் வரை சுத்த உஷ்ணம் பரவி ஊன் உடலே ஒளியுடலாகும்.நாம் தவம் செய்யும்போது,கண்மணி ஒளியை தியானம் செய்யும்போது முதலில் நமக்கு முன் தோன்றும் ஒளி.தவம் தொடரும்போது நம் சிரசின் பின் தோன்றும் ஒளி வட்டம்.மேலும் தவம் தொடரத்தொடர சூரிய சந்திர அக்னிக்கலை சேர்ந்து மேலெழும்பும்.சிரநடு மேல் எழும்பும் நடுவான ஜோதி !!
அனுபவம் கூறும் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts