ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சத்திய ஞான சபை - ஞான அனுபவம்











வள்ளல் பெருமான் தானே முன்னின்று கட்டியது சத்திய ஞான சபை, ஞான உபதேசங்களை அருட்பாக்களால் கூறியருளிய வள்ளலார் பாமரர்களும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கக் கட்டியதே ஞான சபை.

சத்திய ஞான சபையில் பிற கோவில்களில் உள்ளது போல் தெய்வத் திருவுருவங்கள் கிடையாது. பூசை வழிபாடு கிடையாது.

இறைவனை நாடி தவம் செய்யும் நமக்கு கிட்டும் முதல் பேறு, ஆத்ம ஜோதி தரிசனம் எல்லோரும் அறிய ஏற்படுத்தினார்.

சத்திய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும்  சிற்சபை பொற்சபை உள்ளது. நடுவே உள்ளே - ஞானசபை உள்ளது. தைப்பூசம் அன்று ஞான சபையில் ஒவ்வொன்றாக ஏழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் பெரும் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.

இதுவரை யாரும் கட்டாத கோயில்!? எனவே இதை கோயில் என்று
அழைக்காமல் சத்திய ஞானசபை என்றார் வள்ளலார்.







இதுவரை யாரும் செய்யாத புதுமையான வழிபாடு!? பிற கோயில்கள் போன்று தெய்வ திருவுருவங்கள் இன்றி, ஒளி ஒன்றே பரமாத்ம நிலை என விளக்க ஞான சபை உள்ளே ஒளியை ஏற்றி காண்பிக்க செய்தார். ஒளியை காண வேண்டுமானால் அதை மறைத்து கொண்டிருக்கும் ஏழு திரைகள் விலக வேண்டும். அது என்ன?

ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களால் நமது கர்மவினைகளுக்கு
தகுந்த படி திரைகள் போன்று ஆத்ம ஜோதி தெரியாத படி மறைத்து கொண்டிருப்பதாகும்.

திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம். இது தான் வள்ளல் பெருமானின்
மிகப்பெரிய சாதனை?

இதுவரை வந்த ஞானிகள் பலர் உபதேசம் செய்துள்ளனர். ஞானிகள் பலர் கோவில் அமைத்தனர். இன்னும் பல ஞானிகள் ஞான உபதேசம் பரிபாசையாகவே செய்துள்ளனர். வேதம் இதிகாசம் புராணம் இன்னும் எவ்வளவோ?! இவை அனைத்துக்கும் மேலாக  அனுபவ ரீதியாக நம் முன் உருவாக்கி நிலை நிறுத்தியது தான் சத்திய ஞான சபை!

இறைவன் பேரொளி. அவனை காண உன்னிடமுள்ள அஞ்ஞான திரைகளை அகற்று என்பதே! எப்படி? புறத்திலே உள்ளதை புரிந்து கொள்வது?

சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு - சிற்சபை வலது கண். பொற்சபை இடது கண் இரு கண் மணியிலுள்ள ஒளியை பெருக்கினால் உள்ளே அக்னிகலையை ஞான சபையில்  ஆத்ம ஜோதியை  மறைத்து கொண்டிருக்கும் நம் கர்ம பந்தத்தால் ஏற்பட்ட திரைகள்
அதாவது கண்மணியின் ஊசிமுனை துவாரத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது ஜவ்வு. இந்த ஜவ்வு தான் 7 நிலை திரைகளாகும். நாம் தவம் செய்யச் செய்ய நினைந்து உணர்ந்து  நெகிழ கண்ணீர் பெருகும். கண்ணில் கனல் எழும்பும் அக்கனல் ஞானக்கனல் உள்ளிருக்கும்
ஜோதியை மறைத்துக்கொண்டிருக்கும் ஜவ்வை சூடாக்கி உருக்கி விடும். கொஞ்சங் கொஞ்சமாக திரை போன்ற ஜவ்வு உருகி கரைந்து விடும். பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும். இதை சொல்வதற்குதான் வள்ளல் பெருமான் சத்திய ஞான சபை கட்டி அங்கே ஜோதி தரிசனமும் காண வைத்தார்கள். ஜோதி தரிசனம் - ஞான அனுபவ நிலை.

இங்கே கண்ணை மூடி கொண்டிருந்தால் எப்படி ஜோதியை தரிசிக்க முடியும்.? இதற்குத்தான்  பெருமான் விழித்திரு என உபதேசம் செய்தார்.

கலையுரைத்த கற்பனையை நிலை என கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக என வள்ளலார் கூறினார்.

இழிச் செயலையே, கண்மூடித்தனம் என்கிறோம். கண்மூடிதனம் என்பது அறியாமையால் செய்வது. இதுவல்லாமலால் நாம் கண்ணை திறந்து பார்த்தல் தானே எல்லாம் தெரியும்! கண்ணை மூடி கொண்டால் ஒரே இருளாகத்தானே இருக்கும்.

சரியை கிரியை யோகம் அனைத்தும் கண்ணை மூடிக் கொண்டு செய்வது
சொற்ப பலனே மிஞ்சும். முழுமை கிட்டாது.

ஞானத்தில் கண்ணை திறந்து கொண்டுதான் தவம் செய்ய வேண்டும். கண்ணை மூடினால் இருள் கண்ணை திறந்தால் ஒளி. நாம் ஒளியை பேரொளியை தானே தவம் செய்ய வேண்டும்.

கண்திறந்து  காண்பதே உண்மை. கண்ணை மூடிக்காண்பது அனைத்தும் மாயை! கண் திறக்க வேண்டும்! ஞான சாதனைக்கு. கண் இமைகளை திறக்க வேண்டும். என்பது ஒன்று. கண்மணியை மறைத்து கொண்டிருக்கும் திரையை அகற்ற வேண்டும். அடைப்பட்ட வாசல் திறக்க வேண்டும்.என்பதும் ஆகும்.

கண் திறப்பது என்பது கண்மணியில் அடைத்து நிற்கும் வாசல் போன்ற திரைகள் நீங்க வேண்டும் என்பதே. அப்போது தான் ஜோதி தரிசனம் ஆத்ம ஜோதி தரிசனம் கிட்டும். ஞானம் பெறலாம். தன் புறக்கண் இமைகளை விட்டு அகக்கண் மணித்திரை திறப்பதே ஞானம்.  திருக்கதவம் திறவாயோ திரைகளெல்லாம் நீக்கியே -மணிக்கதவம் திறவாயே என வள்ளல் பெருமான் பாடியுள்ளார்.

ஒரு ஓவியம் ஒரு சிற்பம் இவை செய்து முடித்த பின் முடிக்குமுன் கடைசியாக செய்வது கண் திறப்பது என்றேயாகும். கண் திறந்தால் பூர்த்தியாயிற்று என்று பொருள்.

அதுபோலவே ஒரு மனிதனுக்கும் அகக்கண் - மணித்திரை திறப்பதே பிறவியின் லட்சியம். பிறப்பில் மிக மிக முக்கியமான நிகழ்வு நாம் மனிதனாக பிறந்த பயன் பெற நம் க திறக்கப்பட வேண்டும். கண் திறந்தால் தான் ஜோதி தரிசனம், இறைவன் அருள் அடியேனுக்கு வள்ளல் பெருமான் அருள், குரு பீடமேறி, நயன தீட்சை மூலம் அகக்கண்களை திறந்து வைக்க அருள் பாலித்திருக்கிறது.

மாதா பிதா பெற்ற மனிதர் குருவை பெற்று தன் அகக்கண்களை திறந்து கொண்டு தவம் செய்து மேன்மையடைய வேண்டும். அதற்குத்தான் வள்ளல் பெருமான் படாத பாடுபட்டார், படுகிறார்.

www.vallalyaar.com

1 கருத்து:

Popular Posts