திங்கள், 26 ஜூன், 2017

கண்மணி ஒளியால் தூண்டுவதே தீட்சை.

புருவமத்தி எதென்றாக்கால் பரப்பிரம் மானதொரு அண்ட் உச்சி
பரப்பிரம்மம் ஆகிய ஒளியாகிய அண்ட உச்சி, அண்டம் போல்
அழகியதாம் - பட்டினத்தார் பாடல். அண்டம் போல் உள்ளது
கண்மணி. அதன் உச்சி என்பது மத்திய பகுதி. புருவமத்தி
எது எனில் கண்மணியின் ஒளிபொருந்திய மத்திய பகுதி.
நமது நெற்றியில் இரு புருவங்களுக்கு இடைப்பட்ட ஆக்னா
சக்கர இடமில்லை!

ஒத்த இடத்தில் நித்திரைகொள்
இது - நம் கண்மணி ஒளியில் நிலைத்து
தூங்காமல் தூங்குவதே ஞானம்.
திருவடி தவம்

சக்கர நெறிநில் - ஒளவையார் கூறியது சக்கரம்போல்
உள்ள கண்மணியைப் பற்றிதான்! வெட்டாத சக்கரம்
என இன்னொரு ஞானி கூறியதும் இதுவ

தீட்சை - தீக்கை என்றும் கூறுவர். அட்சத்தில் உள்ள
தீயை உணர்த்துதல் தீட்சை! அட்சம் என்றால் கண்!
தீ உள்ள கையில் - கண்ணில் உணர்வு கொடுப்பது தான்
தீக்கை!  சீடன் கண்மணியில் உள்ள தீயை குரு தன் கண்மணி
ஒளியால் தூண்டுவதே தீட்சையாகும்.

சூட்சும சாரீரமே ஆன்ம சரீரம். ஆன்ம சரீரம் பிறப்பது
தீட்சையில் தான்!  முதலில் பிறக்கணும்! பிறகு பக்குவம் ஆகணும்!
பின்னரே கல்யாணம்! வாருங்கள் தீட்சையின் மூலம் மீண்டும் பிறக்க!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts