செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

இறைவன் திருவடியை அடைய

"அமிர்தம் உண்ண முச்சுடரும் ஒன்றாகணும்!
......கண்ணொளி கண்டபேர்க்குச் சென்னமு மரணம்
நீங்கித் திருப்பதஞ் சேரலாமே" - பாடல் 12


யார் ஒருவர் தன் கண் ஒளியை காண்கிறார்களோ!
அவர்களுக்கு பிறப்பு−இறப்பு இல்லை.


அப்படிப்பட்ட உத்தமர்கள்தான் திருவாகிய இறைவனின் அடி பாதம்−சேரவார்கள்! திருவடியை அடைவார்கள்.


"இறைவன் திருவடியை அடைய கண்ணொளியை பார்".


இதை விட தெளிவாக சொல்ல என்ன இருக்கிறது!இறைவன் திருவடியை அடைந்தால் பிறப்பு இறப்பு இல்லை!இதைத்தானே எல்லா ஞானிகளும் கூறினர்.


திருவருட்பிரகாச வள்ளலாரும் மரணமிலா பெருவாழ்வு என இதைத்தானே கூறுகிறார்..


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:47


www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts