செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!

"பக்தியாய் பணிந்த பேர்க்குப் பரவெளி காணலாமே"
பாடல் 18


ஞானம் ஞானம் என்று கூறிக்கொண்டு வறட்டு வேதாந்தம் பேசித்திரிவதில் அர்த்தமில்லை!தத்து பித்து என்று தத்துவ விளக்கம் கூறி பிரயோஜனமில்லை!


*குருபக்தி வேணும்*!குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் என ஔவைக்குறள் கூறுகிறது.


குருவில்லா வித்தை பாழ்!சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது!


யார் ஒருவர் குருவை பெற்று−உபதேசம் பெற்று−திருவடி தீட்சை பெற்று குருவே சரணம் என பக்தியோடு சரணாகதியாகி இருப்பாரோ அவரே இறைவனை அடைவர்!


"பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் இறையை காட்டும்"!


*ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!*


பக்தி வேணும். *சரணாகதி வேணும்* அவனே இறைவன் திருவடியை அடைவான்!


ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் ஐயா...

நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது

பக்கம்:48

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts