புதன், 21 மார்ச், 2018

இறைவன் இயல்பு!

"நாம் தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை
நாம் தேடச் செய்கின்ற நற்றாய்"

இதுதான் இறைவன் இயல்பு!

கருணை!

இறைவன் தாயாகி முதலில் தன்னை உணரச் செய்கிறார்!

பின் நாம் பக்குவம் பெற்று நன்னெறியடைந்து தவம் செய்து நாம் தேடிக் கண்டடையச் செய்கிறார் தாய்!

உடலைதந்த தாயைத்தான் பெரிதாக சொல்கிறோம்!

உயிரைதந்த தயாபரனை நாம் நினைக்கிறோமா?

*அம்மையும் அப்பனுமான இறைவன் உயிர்தராவிட்டால் உடல் சவம்தானே!*

கொஞ்சமாக தன்னை காட்டும் தாய் ஆன இறைவனை பின்நான் கெஞ்சி கூத்தாடி *தவமியற்றி பரிபூரணமாக உணர வேண்டும்!*

*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*

நூல் : திருவருட்பாமாலை
          மூன்றாம் பகுதி

பக்கம் : 51

குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts