புதன், 28 மார்ச், 2018

வேதங்கள் முடிவாக கூறுவது

ரிக்,யஜீர்,சாம,அதர்வண வேதங்கள் முடிவாக கூறுவதும்,இராமாயணம்,மகாபாரதம்,இதிகாசங்கள் இயம்புவதும்,பதினெட்டு புராணங்கள் கூறுகின்றதும்,ஆறு அந்தங்களும் எல்லா ஆகமங்களிலும் சொல்லப்படுவது இறைவனை பரம்பொருளைப் பற்றியே!
அப்படிப்பட்ட எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே−என்றே உரைக்கின்றன.!

அந்த ஒருவன் நம் மெய்யிலே−உடலிலே கண்மணியிலே ஒளியாக உள்ளான் என்பதாகும்!

நம் கண்மணி ஒளியில் மனதை வைத்து தவம் செய்தால் நாதத்தொனி கேட்கலாம்!

நாதமுடிவில் *வாலைத்தாய் அமுதம் தரக் காத்திருக்கிறாள்.*

அவளருளால் அமுதம் உண்டு நாயகன் பரம்பொருள் சந்நிதியை அடையலாம்.

"நாட்டம் இரண்டும் ஒளியானால் நமனில்லையே"

இறைவனை நாடுகின்றவர்க்கு இது எளிதே!"

*"கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்ததாம்"நாம் இறைவனை நாடிப்போனால் இறைவன் நம்மை நாடி வேகமாக வந்திடுவார்!*

ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் ஐயா..

🙏👁👁🙏..
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை
மூன்றாம் பகுதி..

பக்கம்:86

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts