புதன், 8 அக்டோபர், 2014

சூட்சும சரீரத்தை அறிய ?

"உள்ளதும் பிறப்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ள வாசலைப் திறந்து காணவேண்டும் மாந்தரே"

உள்ளது சூட்சும சரீரம்! பிறப்பது ஸ்தூல சரீரம்! ஸ்தூல சரீரத்தைக் கொண்டு தான் சூட்சும சரீரத்தை அறிய வேண்டும்!

இதன் மூலமே, சூட்சும சரீரத்தை அறிய உணர மறைக்கப்பட்ட கள்ள வாசலை கண்மணி நடுவே உள்ள ஊசிமுனை வாசலை திறக்க வேண்டும்! உள்புக வேண்டும்! கண்மணி ஒளியே குண்டலினி சக்தியாம்! இதுவே ஒப்பற்ற ஞான ரகசியமாம்! உரைத்தேன் யானே!!

இருகண்மணி ஒளி - சூரிய ஒளி சந்திர ஜோதி உள்ளே இணையும் போது, உள்ளே தான் ஒன்று சேரும்!? நாதத்தொளி கேட்கும்! ஒளிக்காட்சியின் போது தான் ஒலியும் கேட்க முடியும்! ஒளியும் ஒலியும் தானே சிவமும் சக்தியும்! அதுதானே மெய்ஞானம்! விஞ்ஞானமும் இதைத்தானே பகர்கிறது?!

நம் கண்ணிலே பார்வை சக்தி! கண்ணால் தான் புறப்போருளை பார்க்கிறோம்!
பார்வை சக்தியால் தான் என்றைக்கு புறப்பார்வை அகத்தே பார்க்க திரும்புகிறதோ அதுதான் ஞானசாதனையின் ஆரம்பம்!

நம் கண்ணிலே இருந்து நம்மை பார்க்கச்செய்பவளும் அவளே! புறத்தே பார்த்து வாழவும் அகத்தே பார்த்து மீளவும் அவளே வழிகாட்டுகிறாள்! விழியிலே அமர்ந்தவள்! வாலை! “அவளருளாலே அவள்தாள் வணங்கி!” அவள் அவன் அது எல்லாம் ஒன்றே!!

அம்பிகையே வாலையே சக்தி சொருபம்! நாதஸ்சொருபம்! சிவசக்தி சொருபம்! மூலாதாரத்தில் அக்னி! மேல் மூலமான நம் இருகண் உள்சேரும் இடம் வாலையே, நமக்கு மூல ஆதாரம்! நாம் பிறக்க, வளர, வாழ ஆதாரம்!

நம் இருதயமான இரு உதயமான சூரிய சந்திரனான இரு கண் ஒளியே சூரிய ஒளி! இம்மூன்றும் சேர்ந்து உள்ளே சகஸ்ர தளத்தில் இருக்குல் சந்திர ஒளியை அடையும் போதே அமுதம் கிட்டும்! சொட்டும்! பருகுங்கள்!

நாம் உண்ட உணவின் சாரத்தை சங்கினி என்கிற நாடி உச்சித்துவாரம் வரை எடுத்துச் சென்று சிரசில் அமிர்தத்தை பெருக்குகிறது! தவம் செய்பவர்கே அது கீழே பாய்ந்து பருகிடலாம்!மூன்று மண்டலம் தாண்டிபோனால் கிட்டும்!

நம் உடலையே ஸ்ரீ சக்கரமாக தந்திர சாஸ்திரம் சொல்கிறது. மந்திர சாஸ்திரம் படித்து மனதை ஒருமைப்படுத்தலாம்! ஒழுக்க சீலனாகலாம்!

“மந்திரம் கால் மதி முக்கால்”! மந்திரம் – கால், காலேன்றால் திருவடி நம் கண்களே! மந்திரமான கண்மணி ஒளியைப் பற்றி சும்மா இருந்தாலே, மதி முதலான முக்கால் – மூன்று கால் இணைந்தாலே முக்தி! மூன்று கால் மதி – ரவி, அக்னி என மூன்று கால்! மதியூகமாக செயல்பட வேணும்! புத்தியுள்ள பில்லா பிழைக்கும்! சாகமாட்டன்! மோட்சம் பெறுவான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts