சனி, 20 ஜூன், 2015

கழுத்துக்கு மேலே ஞானம் ! கழுத்துக்கு கீழே மாயை அஞ்ஞானம்!

மேல் வைத்தவாறு செய்யாவிடின் மேல் வினை
மால் வைத்த சிந்தையை மாயமதமாக்கிவிடும்

குரு தீட்சை பெற்று திருவடி மேல் - கண்மணி ஒளி மேல் மனதை
வைத்து உணர்வை பெருக்கி தவம் செய்ய வேண்டும்! இங்ஙனம்
செய்யா விடில், வேறு எந்த சாதனை செய்தாலும் மேல் வினை?!
கண்மணி ஊசி முனை துவாரத்தின் மேல் உள்ள வினைத்திரை -
மும்மல வினை திரை மேல்வினை தான் வேலை செய்யும்! அது
மால்- மாயை - கிருஷ்ணன் -விஷ்ணுவால் சூழப்பட்டு மனம் செயல்பட்டு
மாயையின் வசம் சேர்ந்து விடுவோம்!

கண்மணிமேல் உள்ள வினைதிரையால் மனம் செயல்பட்டு மாயையால் மதியிழந்து விடுவர்! வாழ்க்கை சக்கரத்தில் சிக்கிகொள்வர் !

மனிதா முதலில் குருமேல் அன்புவை! குருவை பணி !  திருவடி தீட்சை பெறு !
பக்தியோடு வைராக்கியதோடு இருந்து தவம் செய்! வாலை தாய் அருள் பெற்று  மாயை மயக்கம் நீங்கி திருவடி ஞானம் பெறலாம்! நீ உன் குருமேல் வைக்கும் பக்தி மேல் வினையை நீக்கும்! குருமேல் பக்தி உள்ளவனே உண்மையான சீடன்!

வாலை தாயை பக்தியுடன் பணிபவனே மாயை அகலப்பெறுவான்!  மேல் வை - எப்போதும் உன் சிந்தனை மேலே உள்ள கண்ணை பற்றிய ஒளியின் மீதே இருக்கணும்! உன்மனம் கழுத்துக்கு கீழே போகாமல் பார்த்துகொள்! நாம் ஞானம்  பெறும் இடம் தலையே! தலையில்தானே ஞானேந்திரயங்கள் ஐந்தும் உள்ளன!

கழுத்துக்கு மேலே ஞானம் ! கழுத்துக்கு கீழே மாயை அஞ்ஞானம்! மேலேயே இரு! உன் சிந்தனை மேலான பொருளை பற்றியே இருக்க வேண்டும்! உன் சிந்தனை மேலே , மேலே போனால் தான் மேலே இருக்கும் மேலானவனை - பரமாத்மனை அடைய முடியும்! உன் சிந்தனை கீழே
இருந்தால் , கீழ் தரமாக இருந்தால் நீ போவது மண்ணுக்கு கீழே தான்! இறைவன் திருவடி மேலே தான்! நம் கண்தான்! கீழேயல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts