செவ்வாய், 27 அக்டோபர், 2015

கர்மத்தால் மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளி!!


ஸ்ரீ வில்லி செல்வி பாடினாள் திருப்பாவை! ஆவுடையார் கோயில் கண்ட, கொண்ட அருட்செல்வன் பாடினான் திருவெம்பாவை! வைணவமும் சைவமும் அருட்பெரும்ஜோதி ஒன்றே அகில உலகக்கும் ஒரே ஆண்டவன் என அழகாக போற்றுகிறது! ஆண்டாளின் ஆண்டவனும், மாணிக்க வாசகரை ஆட்கொண்ட ஆண்டவனும் ஒன்றே!?  மூளையை செயல்பட வைப்பது எப்படி?

நாம் செய்ய வேண்டியது என்ன?

தூங்கி கிடக்கும் ஆன்மாவை தட்டி எழுப்புவதே ஆத்ம சாதனை! கர்மத்தால்
மறைந்து கிடக்கும் ஆன்ம ஒளியை பிரகாசிக்க செய்வதே ஞான சாதனை.

இறைவன் மீது பக்தி பண்ணு! ஒரு பூவாவது  அவன் திருவடியில்
சமர்பித்து பணி! இறைவன் திருவடியில் சமர்ப்பித்து பணி! இறைவன்
திருவடியாகிய உன் கண்ணில் துலங்கும் இறைவனை பணி! உன்
கண்ணாகிய -கண்மலர் இரண்டில் ஒன்றையாவது இறைவனுக்கு
பக்தியுடன் சமர்ப்பித்து விடு! வருவான் பகவான்!

பாடு,கத்து,கதறு தேவார திருவாகச திவ்ய பிரபந்த திருவருட்பாவை
பாடு! உன்மனம் போல் இறைவனை போற்று புகழு பாடு!உன்னை
நீ உணர உன்னிலே இருக்கும் இறைவனிடம் மன்றாடு! அழு
கதறி அழு! தேம்பி தேம்பி அழு! அழுதால் பெறலாம் அவன் அருளை!
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்! வாலை அமுதம் தருவாள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts