செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

ஞானத்தை தரும் பழம்!

நாம் கண்மணியை எண்ணி தவம் செய்யச் செய்ய கண்கள் சிவந்து,
காய் கனியாவது போல,மும்மலத்தால் காயாக இருக்கும் பூ
கண்மணி தவத்தால் கனிந்து பழமாகிவிடும்.

அந்த பழம் ஞானப்பழம்!
ஞானத்தை தரும் பழம்!

அது இருக்குமிடம் மலை!கண் தான் மலை என்று சொல்லப்படும்!
உயர்ந்து விளங்குவதால் மலை எனப்படும்!

பரிபாஷை!

கண்ணாகிய மலை கனிந்து விடுவதால் பழமலை என்றார் வள்ளல் பெருமான்!


🙏🏻👁👁🙏🏻...



ஞானசற்குரு திருசிவ
செல்வராஜ் ஐயா
www.vallalyaar.com

சனாதன தர்மம்!

மரணமிலா பெருவாழ்வு பெற வழி காட்டுவதே சனாதன தர்மம்!


ஒவ்வொரு ஆத்மாவும் தன்னை உணர்ந்து மேன்மையடைய வழி காட்டுவதே சனாதன தர்மம்!


எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரும் எல்லா வல்ல அந்த பரமாத்மாவின் பிள்ளைகளே -
அம்சமே என உரைப்பதே சனாதன தர்மம்!


ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் "வடலூரில் சத்திய ஞானசபையில் தைபூச ஜோதி தரிசனம் காட்டப்படுவதன் உண்மையான மெய்ஞான விளக்கம் பற்றிய காணொளி"....தேடல் உள்ளோர் கண்டுகொள்வீர்...
https://www.facebook.com/saranam.guruve/videos/158417401611491/





ஞானசற்குரு
சிவ செல்வராஜ்
அய்யா


சனாதன தர்மம்
பக்கம் எண் 70

நாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக் கடலான இறைவன்



நாமெல்லாம் , இறைவனாகிய பெருங்கருணை ஒளிக்கடலின் ஒரு சிறு

அணு அளவு ஒளியிலும் ஒரு திவலையே! நம் எல்லோர் உள்ளிலும் ஒளியாக

துலங்கும் அந்த அருட்பெருஞ்சோதியே , வேண்டினவர் வேண்டாதவர் எல்லோருக்கும்அ ருள் கொடுக்கின்றது .


விருப்பு வெறுப்பு அற்றவன் அல்லவா இறைவன்! நாத்திகம் பேசும் மடையர்களுக்கும் அருள்பவனே கருணைக் கடலான இறைவன். ஏனெனில் எல்லா உயிர்களும் அவன்படைப்பல்லவா? எல்லோரும் அவன் பிள்ளையல்லவா?

எவ்வளவுதான் அயோக்கியனானாலும் உலகிலே பெற்றதாய் பிள்ளையைவெறுக்கமாட்டாள். உலகத்தையே பெற்ற தாயான கடவுளா வெறுப்பார்?! மூடனுக்கும் பஞ்சமா பாதகம் புரிபவனுக்கும் அருள் கொடுத்து வாழவைப்பவனே அருட்பெருஞ்ஜோதியான ஆண்டவன். மூடன்- கவி காளிதாசன் ஆனான்!

வேடன் - கண்ணப்பன்ஆனான்!


காடன் - வால் மீகி ஆனான்!


நாடன் - அருணகிரிநாதர் ஆனான்!






இன்னும் எத்தனையோ பேர் ஏற்றம் பெற்றனரே! எந்தை அருட்பெருஞ்சோதி அருளினாலே!

ஏழு ஆதாரங்களும் 72000 நாடி நரம்புகளும் -கண்மணி ஒளியில் அடக்கம்.



சத்தவுலக சராசரமும் தாளிலொடுக்கும் தனிப்பொருளே - பாடல் 4


ஏழு உலகமும் இந்த பிரபஞ்சமெலாம் திருவடியில் - தாளில் ஒடுங்கி நிற்கின்ற தனிப் பெரும்பொருளே கண்மணியே. ஏழு உலகம் - நம் உடலில் உள்ள ஏழு ஆதாரங்களும் - நம் உடலிலுள்ள 72000 நாடி நரம்புகளும் நம் கண்மணி ஒளியில் அடக்கம். கண்மணி ஒளியே அனைத்துக்கும் ஆதாரம்.

சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.



நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சுட்சமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது.

தீட்சையின் போது சீடனின் இவ்வினை திரையை சற்குரு தன் கண் ஒளியால் பிளந்து சீடனின் கண் ஆகிய விளக்கினை ஏற்றி வைக்கிறார்.


https://www.facebook.com/saranam.guruve





உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்!?

உடலை தந்த தாய்தந்தையரும் அழிந்து விடுவர்!

இறைவனை உயிர்தந்த அம்மையப்பனை சரணடைந்தால் உடலும் அழியாது!

உயிரின் ஆற்றலை ஒளித்தன்மையை உடலும் பெறும்!?

இதைத்தான் வள்ளல்பெருமான் உரைக்கின்றார்.

*உயிர்தந்த தாயும் தந்தையும் குருவுமான இறைவனை
அருட்பெருஞ்ஜோதியை உணர்பவனே முக்தியடைகிறான்!*

 மரணமிலா பெருவாழ்வு பெருகிறான்!

ஞானியாகிறான்!

சித்தனாகிறான்!


*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : திருவருட்பாமாலை இரண்டாம் பகுதி
பக்கம் : 17
குருவின் திருவடி சரணம்

மனதை அடி அடி என அடித்து நொறுக்கி!!

"நையா நின்றுலைகின்ற மனத்தால்"−பாடல் 5

நம் மனமே வினைகளின் இருப்பிடம்!

வினைகளை செயலாற்றுவதே மனதின் வேலை!இந்த பொல்லா மனம் துன்பம் அறியாவிட்டால் உலக மாயையில் சிக்கி சுகபோகத்தில் உழன்று மேலும் மேலும் பாவத்தை சேர்க்கும்.

இந்த மனதை அடி அடி என அடித்து நொறுக்கினால்−நைய புடைத்தால் தான் புத்தி வரும்!

துன்பம் தான்−நாம் செய்த பாவம் தீர்ந்தால்தான்!

பேரின்பம் இறைவனை அடையும் பாதை திறக்கும்!


மகாபாரதத்தில் குந்தி தேவி கண்ணணிடம் கேட்டவரம்
"எனக்கு எப்போதும் துன்பத்தையே கொடு"என்று தானே!

அப்போது தானே சதா சர்வ காலமும் நாம் கண்ணணை நினைப்போம்.
அப்போது தானே கருணை கிட்டும்..


ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா..
www.vallalyaar.com

 நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை முதல் பகுதி

🙏🙏🙏..

மூச்சுப் பயிற்சி

*மூச்சை இழுப்பது போன்ற மூச்சுப் பயிற்சி எதுவும் செய்யாதீர்கள்! ஆபத்து!
நீ பிறந்தது முதல் சீராக ஓடும் மூச்சை குழப்பாதீர்கள்!

ஒழுக்கமில்லாமல் சைவ உணவில்லாமல் நீ செய்யும் எந்த யோகத்தாலும் ஒரு பயனும் இல்லை!


சைவ உணவே சன்மார்க்க உணவு! (சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு)

*ஒழுக்கமே ஞானத்துக்கு அஸ்திவாரம்!*
குருவின் திருவடி சரணம்


எண்ணாயிரத்தாண்டு யோகம்

எண்ணாயிரத்தாண்டு யோகம்
செய்யினும் கண்ணார்
அமுதினை கண்டறிவாரில்லை!”
– திருமூலர்


கண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து *கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை! அதற்கு நீ முதலில் கட – உள்ளே, உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்!
எப்படி கண்மணி வழி! அது தான் ஒரே வழி! குருவின் திருவடி சரணம்
நம் உடலில் ஜீவனாய் இறைவன் இருக்கிறான். நம் உடலில் கண்மணியில் ஒளியாக ஜீவன் உள்ளது. கண்மணியில் மனதை நிலை நிறுத்துக. இம்முறையில் சாதனை தொடர்ந்தால் அனுபவங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். மேனிலை அடைவீர்கள் உறுதி, சத்தியம்.

இதுதான் உண்மை. குருவின் திருவடி சரணம்

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்

“பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும்.” – 349


பொதுவாக இந்த குறளுக்கு விளக்கம் எந்த பற்றும் இல்லாமல் இருந்தால் இறைவனை காண முடியும் (அ) பிறப்பறுக்க முடியும் என்று சொல்ல படுகிறது. இது எந்த அளவிற்க்கு மிக சரியான கருத்தோ அதே அளவு இந்த குறளில் இருக்கும் இன்னொரு விஷயமும் மிகவும் முக்கியமானது. எதன் மூலமாக பிறப்பறுக்க முடியும் என்று சொல்கிறார்.ஆம், முன்பு பார்த்த குறளில் பிறவி பெருங்கடலை நீந்த இறைவன் அடியை சேர வேண்டும் என்று சொன்னவர் இந்த குறளில் பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்று சொல்வதன் மூலம் எது இறைவன் அடி என்றும் சொல்கிறார். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் – ஆம், கண் வழி மூலமாகத்தான் நாம் இறைவனை அடைய முடியும் (அ) பிறப்பறுக்க முடியும். இதைத்தான் இறைவன் திருவடி என்றும் சொல்கிறார்.


ஏன் இங்கு பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார் என்று சிந்தித்தால் அதுதான் ஞான பாதை. கண்ணின் மகத்துவத்தை மேலும் அது எப்படி நம் உடம்பில் இருக்கிறது என்பதைத்தான் திருவள்ளுவர் வெளிபடுத்தியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அதுதான் பிறப்பறுக்கும் என்று சொல்கிறார். ஏன் கண்ணை பற்றற்ற கண்ணே என்று சொல்கிறார்?
 
நமது கண் அமைப்பை நன்றாக பாருங்கள். வெள்ளை விழி – அதன் நடுவே கருவிழி – இந்த கருவிழியை தான் கருமை பெற்ற கடல் என்கிறார் திருஞான சம்பந்தர், வெள்ளை விழி தான் திருப்பாற்கடல் என்றார்கள் ஆழ்வார்கள். இந்த கருவிழியாகிய கருங்கடலிலே மிதக்கின்ற கலம் தான் நம் கண்மணி. எவ்வளவு ஒப்பற்ற உவமை இது. நம் கண்மணி வேறு எதையும் பற்றாமல் கருவிழியில் பிராணநீரில் மிதந்து கொண்டிருக்கிறது. இது தான் ஞான இரகசியம். தாயின் கருவினுள் சிசு பனிக்குடத்தில் இருப்பது போலவே கண்மணியும் “நீர் மேல் நெருப்பாக” மிதந்து கொண்டிருக்கிறது. கண்மணியின் மையம் ஊசிமுனை துவாரம் உள்ளது. அதனுள் ஊசிமுனை அளவு நெருப்பு. நம் கண்மணியின் மத்தியில் ஊசிமுனை அளவு ஒரு சிறு துவாரம் உள்ளது. இந்த துவாரத்தை துலங்கும் நம் ஜீவ ஒளியை நம் வினைகள் சூட்சுமத்தில் 7 திரையாக அமைந்து மூடியுள்ளது. இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது. நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான். இவ்வினைகள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது. கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.

நம் கண்ணில் சூட்சமமாக உள்ள வினை திரையை நீங்கினால் தான் நம் கண் பற்றற்ற கண்ணாகும்.
இந்த வினை திரையை நீக்குவது எப்படி? அதற்கும் விடை அளிக்கிறார் வள்ளுவர் பெருந்தகை :
“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”
 
நாம் ஞான சற்குருவிடம் திருவடி தீட்சை பெற்று கண்களில் உணர்வு பெற்று தவம் செய்கையில் , மெய்ப்பொருளான நம் கண் சிவந்து செம்மையான கண்ணாகும். அதுவே செம்பொருள் என்கிறார் வள்ளுவர். அதாவது செம்பொருள் கைவல்யமானவரே பிறப்பை தவிர்பர். வினையை சுட்டெரிப்பர்
இதே போல மீதி உள்ள இந்த குறள்களை பார்த்தாலும் இதில் ஏன் வள்ளுவர் இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மீகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.


கீழே இருக்கும் இந்த குறளுக்கான விளக்கம் தெரிந்தால் போதும் அது நிச்சயமாக ஞான பாதைக்குள் நம்மை தள்ளும்....
ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயா.....


ஆத்மஞானத்தின் முதல் வெற்றி??

நாம் கண்மணி ஒளியை நினைந்து தவம் செய்யச் செய்ய உள் ஒளிப்பெருகி பெருகி கொஞ்சங் கொஞ்சமாக படலத்தை உஷ்ணத்தால் உருக்கி கரையச் செய்து விடும்.


*முற்றிலும் கரைத்த பின்னரே உள்ஒளி −கண்ஒளி நம் காட்சிக்குவரும்*.
ஆத்மஞானத்தின் முதல் வெற்றி இதுதான்!தத்துவ வெற்றி என்பது இதுதான்.


இந்த உலகில் எல்லா ஞானிகளும் பெற்ற பேரானந்தம் இவ்வாறுதான்.!
*உள்ஒளி தோன்றினால் எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிடும்*!
பிரபஞ்ச ரகசியம் பட்டபகல் போல் வெளிப்படும்.
நாம் யார்?நம்மை படைத்த அந்த இறைவன் யார்?பிரபஞ்சம் எவ்வாறு என அறியலாம்...


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:35

குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏..

இறைவன் திருவடியை அடைய

"அமிர்தம் உண்ண முச்சுடரும் ஒன்றாகணும்!
......கண்ணொளி கண்டபேர்க்குச் சென்னமு மரணம்
நீங்கித் திருப்பதஞ் சேரலாமே" - பாடல் 12


யார் ஒருவர் தன் கண் ஒளியை காண்கிறார்களோ!
அவர்களுக்கு பிறப்பு−இறப்பு இல்லை.


அப்படிப்பட்ட உத்தமர்கள்தான் திருவாகிய இறைவனின் அடி பாதம்−சேரவார்கள்! திருவடியை அடைவார்கள்.


"இறைவன் திருவடியை அடைய கண்ணொளியை பார்".


இதை விட தெளிவாக சொல்ல என்ன இருக்கிறது!இறைவன் திருவடியை அடைந்தால் பிறப்பு இறப்பு இல்லை!இதைத்தானே எல்லா ஞானிகளும் கூறினர்.


திருவருட்பிரகாச வள்ளலாரும் மரணமிலா பெருவாழ்வு என இதைத்தானே கூறுகிறார்..


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:47


www.vallalyaar.com

ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!

"பக்தியாய் பணிந்த பேர்க்குப் பரவெளி காணலாமே"
பாடல் 18


ஞானம் ஞானம் என்று கூறிக்கொண்டு வறட்டு வேதாந்தம் பேசித்திரிவதில் அர்த்தமில்லை!தத்து பித்து என்று தத்துவ விளக்கம் கூறி பிரயோஜனமில்லை!


*குருபக்தி வேணும்*!குருவினடி பணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம் என ஔவைக்குறள் கூறுகிறது.


குருவில்லா வித்தை பாழ்!சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது!


யார் ஒருவர் குருவை பெற்று−உபதேசம் பெற்று−திருவடி தீட்சை பெற்று குருவே சரணம் என பக்தியோடு சரணாகதியாகி இருப்பாரோ அவரே இறைவனை அடைவர்!


"பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் இறையை காட்டும்"!


*ஞானகுரு பெற்றவனே பூரண மனிதன்!*


பக்தி வேணும். *சரணாகதி வேணும்* அவனே இறைவன் திருவடியை அடைவான்!


ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் ஐயா...

நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது

பக்கம்:48

யார் குரு?

யார் நம் அறிவை தூண்டி, நாம் யார்? என அறிய வழிகாட்டி, *விழியில் உணர்வை ஊட்டுகிறாரோ அவரே குரு!*

ஒப்பற்ற குரு! சத்குரு! ஞானகுரு!

*நாம்யார் என ஒருவன் உணர வழிகாட்டும் அந்த ஒப்பற்ற குருவை! ஒருவன் வாழ்க்கையில் கடைத்தேற முடியும்!*

உலக வாழ்வில் சிறப்பாக, நோயின்றி, வாழ்வாங்கு வாழ்ந்து *இனி பிறவாமல் இருக்க யார் வழி சொல்கிறாரோ அவரே சத்குரு!*


அறியாமையில் உழலும் மனிதன் சிந்தனையை தூண்டி, பிறப்பறுக்க, *விழியால் உணர்வூட்டி முன்னேற்றுபவரே ஞானகுரு!*


ஒப்பற்ற குருவே சத்குரு!

சத்குருவே ஞானகுரு!
*நாமும் பெற்றால் தான் தப்பித்தோம்!*
இல்லையேல் மீண்டும் மீண்டும் பிறவிப் பிணிதான்!


*ஞான சத்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : சநாதன தர்மம்
பக்கம் : 36
குருவின் திருவடி சரணம்
www.vallalyaar.com

மனப்பூட்டை திறப்பது மெய்யாலே

"பூட்டை திறப்பது கையாலே மனப்பூட்டை திறப்பது மெய்யாலே"
என"ஒரு சித்தர் பாடியிருக்கிறார்.

மனம் இருக்கும் கண்மணியை உள் இருக்கும் சோதியாலே உருக வைப்பதே சாதனை!

இப்படித்தான் இந்த பூட்டை திறக்கணும்!திறக்க வழி சொல்லியிருக்கிறார் பீரப்பா!

விழி திறந்து தவம் செய்யுங்கள்!அடைத்த வழி திறந்து உள்ளே செல்லலாம்!
உள்ளிருக்கும் சோதியை காணலாம்!

உன்னையே நீ காணலாம்!நீ வேறு யாருமல்ல!அந்தப் பரம்பொருளின் ஒரு சிறுதுளிதான்!


அந்த பெருஞ்ஜோதியின் ஒரு சிறு ஜோதி துகள் தான்!


ஞானசற் குரு
திரு சிவசெல்வராஜ் ஐயா..
குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏...
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது

பக்கம்:55
www.vallalyaar.com

நெருப்பாறு - பொய்கை

"ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற் றேடிய வாதரைப் போல"
பாடல்- 948(திருநாவுக்கரசர்)


சிவனோடு வாதம் புரிந்தவர் சுந்தரர்!
சிவனருளால் பெற்ற பொன்னை ஆற்றிலே போட்டார். 
பின் அவரூர் சென்று அங்குள்ள குளத்திலே அதையெல்லாம் பெற்றார்.


எவ்வளவு பெரிய அற்புதம் இது.
கண்மணி உள்ளே ஒளிக்கலை ஆறு போல் போகும் "நெருப்பாறு"!
அது சேரும் இடம் தடாகம் பொய்கை! அங்கே சிவன் துலங்கியிருக்கிறார்!
மனதில் சிவனை எண்ணி கண்மணி உள்ளே ஆற்றில் போட்டார்!
உள்ளே போய் குளத்தில் சிவனை தேடி பெற்றுக்கொண்டார்!
அகத்துக்கும் புறத்துக்கும் பொருந்துவதே ஞானம்! மெய்ஞ்ஞானம்!

 
ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா!
மூவர் உணர்ந்த முக்கண்
(தேவாரம் விளக்க உரை )
உண்மை ஞானம் அறிய WWW.VALLALYAAR.COM பார்க்க 👀

உண்மை ஞானம் அறிய

நாம் தவம் செய்யும் போது முஹம்மது−ஜோதி நம்முன் தோன்றும்.


அது பச்சை நிற ஒளியாகும்.சிறிது காலத்திற்குப்பின் பச்சை நிறம் மாறி
பவளம்−சிவப்பு நிறமாகும்.


அதாவது கண்மணியில் ஊன்றியிருந்து தவம் செய்தால் முதலில் பச்சை நிற ஒளி காணும் தவம் தொடரும் போது பச்சை நிறம் போய் சிவப்பு நிறம் காணும்!

இதைத்தான் வள்ளல் பெருமான் 7 நிற திரைகள் அமைத்து வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பித்தார்கள்..


உண்மை ஞானம் அறிய
*www.vallalyaar.com*
ஞானசற்குரு
திரு சிவசெல்வராஜ் ஐயா..🙏👁👁🙏..
நூல்:ஞானக்கடல் பீர்முஹம்மது
பக்கம்:73

கருணை மழை பொழியும்

"அன்பென்ப தேசிவம் உணர்ந்திடுக எனஎனக்கு
அறிவித்த சுத்த அறிவே"


அன்பு என்பதே சிவம். நம் கண்மணி ஒளியை எண்ணி எண்ணி தவம்
செய்தால் நம் கண்ணிலிருந்து நீர அருவியென கொட்டும்!
சதாகாலமும் அங்ஙனம் இருப்போமானால்!

நம் கண் கருணை மழை பொழியும் கண்களாக விளங்கும்.எப்படி?

அங்ஙனம் தவம் செய்தால் நம் கண் ஒளி துலக்கமாகும்!
கண்ஒளி துலங்குபவன் அன்பு மயமாவான் கருணை வடிவாவான்!
ஒளிதானே அன்பு!அது துலங்குபவனும் அன்பானவகி விடுவான்!


அன்பு என்பது சிவமாகிய ஒளி அதை நீ வெளிப்படுத்த தவம் செய்!

அன்பாயிரு என்றால் சிவமாயிரு ஒளியாயிரு என்று பொருள்!
இதை எமக்கு அறிவித்ததே எம் கண்ணுள் ஒளியாய் நின்றிலங்கும் அந்த
பழைய பரமசிவமே!

அதிலிருந்து வருவதே சுத்தஅறிவு!
ஞானம்! நீங்களும் ஞானம்பெற அன்பாயிரு.!

ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா..


நூல்:திருவருட்பா
மாலை மெய்ஞான உரை மூன்றாம் பகுதி.
பக்கம்:81
உண்மை ஞானம் அறிய பார்க்கவும்

ஞானக்கடல் பீர்முஹமது

"ஏட்டி லடங்காப் பொருளே
யெனதிரு கண்மணியே "
பாடல் - 11

யாராலும் சொல்லி, எழுதி, உரைக்க முடியாத அளவு மகிமை பொருந்தியது
" பொருளே " பொருளே எனது இருகண்மணியே என்கிறார் பீரப்பா!


ஞானசற்குரு
சிவ செல்வராஜ்
ஐயா


நூல் :
ஞானக்கடல் பீர்முஹமது
பக்கம் 53


www.vallalyaar.com

யார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே.

யார்க்குங் குரு பிள்ளையான முஹம்மதுவே. பாடல் - 15

யார்க்கும் - இந்த உலகத்திலுள்ள யாராயிருந்தாலும் எல்லோருக்கும் குரு முஹம்மதுவே!

குரு - முகம்மதுதான்!

முகம் அதுதான்! முகத்துக்கு முகமான கண்தான் அது!

நமது இடது கண் சீவன் வெளிப்படும் இடம்! நம் ஞான சாதனைக்கு நமக்கு வழி காட்டுவது நம்மை சிவத்திடம் கூட்டிச் செல்வது நம் சீவனேயாகும்!
 
நம்மை இறைவனிடம் சிவத்திடம் கூட்டிச்செல்வது நம் சீவன் - நம் ஆத்மாவேயாகும். ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆத்மாவே உண்மையான குரு!

ஞான சற்குரு
சிவ செல்வராஜ்
ஐயா
நூல்: ஞானக்கடல்
பீர்முஹம்மது
பக்கம் எண் : 27


www.vallalyaar.com

ஆத்மஸ்தானம் வரையுள்ள சூக்குமமான வழி!


*"சூக்கும மான வழியிடைக் காணலாம் சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்"*


நம் உள் தலை நடுவில் இருக்கும் இறைவனை அடைய வழி கண்மணி
ஊசிமுனை துவாரத்தின் உள்ளே மயிர்பாலமாகும்!

அது இரு கண்மணி உள் ஆரம்பித்து ஆத்மஸ்தானம்
வரையுள்ள சூக்குமமான வழி!

*பெரும் இரகசியம் இது!*
*தவம் செய்வோரே காண்பர் உணர்வர்!*

நமது கண்மணி ஊசிமுனை துவாரத்தை மெல்லிய
வட்ட ஜவ்வு மூடிக் கொண்டுள்ளது.


*இதுவே நம் மும்மலத்திரை வெகு சூக்குமமான நிலையில் உள்ளது.*
ஊனக்கண்களால் காண இயலாது!

தவம் செய்யும் போது காணலாம் திரை மறைப்பை உணரலாம்!
இதெல்லாம் குரு உபதேசம் பெற்று குரு தீட்சை பெற்று தவம் செய்து
பார்க்கலாம் உணரலாம்!


*ஞான சத்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : மந்திர மணி மாலை
பக்கம் : 99

உண்மை ஞானம் கூறும் ஒரே இணையதளம்
**www.vallalyaar.com**
குருவின் திருவடி சரணம்

நீங்களும் நன்றாக அழுங்கள்



யார் அழுகிறாரோ அவர் அழுகையை நிறுத்த சிவன் ஓடோடி, 
சம்பந்தர் அழுதார் ஓடோடி வந்தார் சிவன் சக்தியோடு, பால் கொடுத்தார், 

நீங்களும் நன்றாக அழுங்கள் தேம்பி தேம்பி அழுங்கள் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து கண்ணீர் ஊற்றெடுத்து அருவி போல் கொட்ட வேண்டும் எப்படியோ அழுது அழுது தொழுங்கள் ஞான தவம் செய்யுங்கள் கண்ணீரோடு விதைக்கின்றவன் கம்பீரத்தோடு அறுப்பான் இது பைபிள் கூறும் ஞானம்


மூவர் உணர்ந்த முக்கண் பக்கம் - 105
ஞான சத்குரு சிவ செல்வராஜ் அய்யா அவர்கள்.

கருநெல்லி


கருநெல்லி என்பது நம் கண்மணியே!உலகில் எங்காவது கருப்பு
நெல்லிக்காய் உண்டா?கருநெல்லி−கண்டதுவே-கண்டதுதான் கருநெல்லி!
கண்டது கண்தானே!கண்தான் கருநெல்லி!கண்மணிதான் கரு!
நம் உயிராகிய கரு! அது கண்ட திருவோத்தூர்!


கண்டம் என்றாலும் கண்ணே!


கண்டம் கரியதாம் என்பது கண்மணிதானே!

தேவர்கள் போற்றும் சிவஞானம் விளங்கும் மாதவனே!
நீயே ஞானசிகரமான மணி! ஒளி! தங்கஜோதி!



ஞானசற்குருதிரு சிவசெல்வராஜ் ஐயா..
நூல்:திருவருட் பாமாலை மெய்ஞான உரை,மூன்றாம் பகுதி
பக்கம்:91


www.vallalyaar.com

இனி எப்பிறவி வாய்க்குமோ?

மனிதனாக பிறந்த நீ இப்பிறவியிலாவது என்னை வந்து
அடைகிறாயா பார்ப்போம் இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு
இம்மானிட பிறவி!

இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ??
மனிதா! இப்பொழுதாவது விழித்தெழு!

----------------------------------------------------------------------------------------


*"இருக்கின்ற மந்திரம் சிவன் திருமேனி"*
நமது தலை நடு உள் இருக்கின்ற ஒளியே சிவத்திருமேனி அதுவே மந்திரமாகும்!
*மனம் திரங்கொண்டாலே அடையமுடியும்!*

மனம் திரமாக திடமாக திருவடியில் இருந்தாலே மந்திரம் சிவம் ஒளி கைக்கூடும்!
மந்திர சித்தியாகும்!
----------------------------------------------------------------------------------------
"பத்து முகமுடையாள் நம் பராசக்தி"
பத்தாகிய ஆத்மஸ்தானத்தை அடைந்தபோதே தாயை பரத்துடன் சேர்ந்த சக்தி பராசக்தியை காணலாம்!
பத்தாமிடம், எட்டும்(வலது கண்) இரண்டும்(இடது கண்) சேர்ந்தாலே அடையும் இடம்!

அதைத்தான் *பத்து முகம் கொண்டவள் பராசக்தி என்றார் திருமூலர்!*

----------------------------------------------------------------------------------------




-ஞான சற் குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

நாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்!

*"உள்ளே நோக்குகின்றோர்களை நோக்கு மருந்து"*

இறைவனை புறத்திலே தேடுபவர் ஒருநாளும் காணமாட்டார்கள்!
இறைவன் நம் மெய்யினுள்ளேயும் இருக்கிறானல்லவா?

நம் மெய்யிலே பொருளாக − கண்மணி ஒளியாக இருப்பதை அறிந்து
உணர்ந்து கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ஒளியாக
துலங்கும் பரமனை உள்ளே பார்க்க வேண்டும்!


நாம் உள்ளே தேடத்தேட அவன் நம்மை பார்ப்பான்!
அவன் வடிவை ஒளியை நாம் காணலாம்!


ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை மூன்றாம் பகுதி..

www.vallalyaar.com  
குருவின் திருவடி சரணம்🙏👁👁🙏...

Popular Posts